ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

இயக்குனர் கௌதமன் புதிய கட்சி ... பெயர் சின்னம் கொள்கை எல்லாம் நாளை அறிவிப்பு!

வெப்துனியா :தமிழகத்தில் நான்கு போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டு முறை சிறை சென்றுவிட்டால் போதும் அவர் உடனே அரசியல் கட்சி தொடங்கி ஒரு தலைவராகிவிடுவார்.
சில ஆண்டுகாலம் அரசியலில் தாக்குப்பிடித்துவிட்டால் பின்னர் இரு கழகங்களும் கூட்டணிக்கு அழைக்கும். இந்த ஃபார்முலா பலருக்கு ஒர்க் அவுட் ஆகிவருவதால் பலரும் துணிச்சலுடன் அரசியல் கட்சியை ஆரம்பிக்கின்றனர்.
அந்த வகையில்  ஒருவர் இயக்குனர் கவுதமன்.  இவர் புதியதாக ஒரு அரசியல் கட்சியை நாளை தொடங்கவுள்ளாராம்.
கட்சி, கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளையும் நாளை அறிவிக்கவுள்ளாராம். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இவரது கட்சி போட்டியிடும் என தெரிகிறது தமிழும், தமிழ்க்கலாச்சாரமும் அழிந்து வருவதாகவும் அதனை மீட்டு எடுக்கவே கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார், சினிமாவிலேயே சாதிக்காத இவர் அரசியலில் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ––

கருத்துகள் இல்லை: