இதையடுத்து, 'ராஜேஷ்வர், கடத்தப்பட்டு இருக்கலாம்' என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில், ராஜேஷ்வரின் உடல், கைப்பற்றப்பட்டது.இதையடுத்து, ராஜேஷ்வரின், 'மொபைல் போன்' அழைப்புகளை, போலீசார், சல்லடையாக அலசினர். அதில், மும்பையில் உள்ள பல உயர்தர மதுபான விடுதிகளுக்கு, ராஜேஷ்வர் அடிக்கடி சென்று வருவதும், அவருக்கு, பல தொலைக்காட்சி நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில், மஹாராஷ்டிராவின், வீட்டுவசதி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் மேத்தாவிடம், உதவியாளராக பணியாற்றிய சச்சின் பவார் என்பவனை, போலீசார் கைது செய்தனர்.
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆன, தினேஷ் பவார் என்ற போலீஸ் கான்ஸ்டபிளை, கைது செய்தனர்.இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையும், மாடலுமான, தேவோலீனா பட்டாசார்ஜி, 28, என்பவளையும், போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபலங்கள்
மூவரிடமும், ராஜேஷ்வர் கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.இந்த கொலை வழக்கில், மேலும், பல சின்னத் திரை பிரபலங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அவை விரைவில் வெளியே வரும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.ce. This includes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக