சனி, 15 டிசம்பர், 2018

ராகுல் காந்தி : விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் .. ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநிலங்களில் ..

raghulதினமணி :புது தில்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்ர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி 3 மாநிலங்களிலும் விவசாயக் கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். 
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதல்வர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது.
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளார். ஒரே நாளில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் படி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளின், விவசாயக் கடனை விரைவில் தள்ளுபடி செய்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை: