திங்கள், 2 ஜூலை, 2018

மத்திய பிரதேசத்தில் மனைவிகள் வாடைக்கு விடப்படுகிறார்கள் .. பல ஆண்டுகளாக தொடரும்.

Chandrasekar Jkc : 18 வருடங்களுக்கு முன்பு வெளியான விஜய்-சிம்ரன் நடித்த
படம் 'பிரியமானவளே'
அதில் விஜய் மேற்கத்திய கலாச்சாரத்துடன் தாயகம் வருவார்.
அவரை திருமணம் செய்துக் கொள்ள தந்தை வற்புறுத்துவார்.
அவரோ திருமணம் பத்தாம் பசலித்தனம் என்றும் வேண்டுமானல் ஒரு அக்ரிமென்ட்படி தனக்கு ஒராண்டுக்கு சிம்ரன் மனைவிராக இருக்கட்டும்.அக்ரிமெண்ட் முடிந்ததும்...அவர்யாரோ...தன் யாரோ என்று இருவரும் பிரிந்து விட வேண்டும் என ஒப்பந்தம் போடுவார்...
பிறகு கதை பாரத பண்பாடு என்று போகும்....
நம் நாட்டில் MP மாநிலத்தில் சந்தையில் இத்தகு ஒப்பந்த மனைவிகள் வாடகைக்கு கிடைக்கிறார்களாம்...
தேவையான தனவந்தர்கள் மாத கணக்கிலோ வருட கணக்கிலோ அநதப்பெண்களை தனக்கு வாடகை மனைவியாக முத்திரை தாளில் பதிவு செய்துக் கொள்கிறார்களாம்...
இதற்கு'தாதிசா பிரதா' (Dhadeecha pratha) என்கிறார்கள்.
இதுவும் நம் தேச கலாச்சாரம்தான்.

கருத்துகள் இல்லை: