திங்கள், 2 ஜூலை, 2018

குழந்தை கடத்தல் வதந்தியால் சென்னையில் 2 பேரை அடித்து நொறுக்கிய கும்பல்

tamil.oneindia.com-siva. சென்னை: சென்னையில்
குழந்தை கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்து 2 பேரை மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை கடத்தல்காரர்கள் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் பரவும் வதந்திகளால் பொது மக்கள் அப்பாவிகளை பிடித்து அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மகராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் குழந்தையிடம் பேச முயன்ற நபர் மற்றும் 4 பேரை குழந்தை கட்டத்தல் ஆசாமிகள் என்று தவறாக நினைத்து பொதுமக்கள் அவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் 2 பேரை குழந்தையை கடத்த வந்தவர்கள் என்று தவறாக நினைத்து பொது மக்கள் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை மெட்ரோவில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது முன்னதாக கடந்த மாதம் போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டியை மக்கள் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப்பில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளால் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது

கருத்துகள் இல்லை: