
இந்நிலையில், இந்த சோக
சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம கடிதங்கள்
அவர்களது வீட்டில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்திப்பேறு
பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும்
அந்த கடிதங்களில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது
சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,
அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை
ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும்
தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க
வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதை
வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில்
பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது
மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த
சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால்
காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம்
குறிப்பிடுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக