வியாழன், 7 டிசம்பர், 2017

மோசடி தேர்தல் அதிகாரிகள். பிரவீன்குமார் . ராஜேஷ் லக்கானி... Flashback .. 144.தடை உத்தரவு நாடாளு மன்ற தேர்தல் பண விநியோகம்..

மோசடி தேர்தல்கள் . பிரவீன்குமார்  ,  ராஜேஷ் லக்கானி தமிழ்நாட்டில் என்ன காரணம் கொண்டும் திமுக பதவிக்கு வந்து விடகூடாது என்று டெல்லி ஆட்சியாளர்கள் மிகவும் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகிறது .
இந்த நோக்கத்தை முன்பு இருந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமார் நன்றாகவே நிறைவேற்றினார் , அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட்டார் .
நாடாளுமன்ற தேர்தலின் போது 144 தடை உத்தரவு பிறப்பித்து அதிமுகவின் பணப் பட்டுவாடாவுக்கு பேருதவி புரிந்தார்.
ஜெயாவிடம் உரிய பணத்தை பெற்றுகொண்டு பதவியை விட்டு ஓடினார்.
அடுத்து வந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும்  அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தவண்ணமே உள்ளார்.
சுமார் 20 தொகுதிகள் இவரது தில்லு முள்ளுகளால் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளாக அறிவிக்கப்பட்டது ..  திமுகவின் அப்பாவு போன்றவர்கள் குண்டு கட்டாக தூக்கி எறியப்பட்டு அவரது வெற்றி பறிக்கப்பட்டது . வடகொரியாவை விட மோசமான சர்வாதிகளாக தேர்தல் அதிகாரிகள் மாறிவிட்டனர் .
இந்திய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை சர்வ தேச அரங்கிற்கு எடுத்து செல்லவேண்டிய கடமை இதர கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும்  உள்ளது
  Flashback ; தமிழக தேர்தல் அதிகாரி 144 பிரவீன் குமார் மாற்றம் !
தேர்தல் ஆணையம் ஒப்புதல் ! தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பிரவீன்குமார் தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக மிகவும் பாரபட்சமாக செயல்பட்டு வந்த பிரவீன்குமார் 2012–ம் ஆண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தார்.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பிரவீன்குமார் மீது சில அரசியல் கட்சிகள் புகார் கூறின. இதையடுத்து தேர்தல் முடிந்ததும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரவீன் குமார் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து பிரவீன் குமாரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் மாற்றப்படுகிறார்.
இது குறித்து பிரவீன்குமார் கூறியதாவது:–
இந்த பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தேன். சமீபத்தில் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்கள்.
தமிழக அரசிடம் தகுதி உள்ள அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் விரைவில் கேட்டுப்பெறும். அதை பரிசீலித்து புதிய அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: