வெள்ளி, 8 டிசம்பர், 2017

உதவி இயக்குனர் உமாராணி மரணம் கொலைதான் ,,, கணவனின் குடும்பத்தினர் மீது சந்தேகம்!

சொத்துக்காக நாடக காதல் செய்து பறையர் சமுதாய தலித் பெண் உமாராணி (எ) இமயா-வை கொலை செய்த வன்னியர் சமூகத்தை சார்ந்த நாடக காதலன் சிவா (எ) கர்ணன் மற்றும் சிவா சார்ந்த நாடக காதல் குடும்பத்தினர் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டவர்த்தி கிராமத்தை சார்ந்த நாடக காதல் மன்னன் சிவா (எ) கர்ணன்
வன்னியர் சமூகத்தை சார்ந்த இவர் உமாராணி பறையர் சமுதாய தலித் பெண்ணை காதல் ஆசை காட்டி திருமணம் செய்துள்ளார்.

திருமணமான உமாராணிக்கு தன் கணவன் சிவா மூலமாக 4 முறை கர்ப்பம்தரிக்க சிவா மற்றும் அவன் குடும்பத்தினர் இனணந்து பறைச்சி வயிற்றில் வன்னியர் வம்சம் வளர்வதா என்று உமாராணியை சித்தரவதை செய்து கருவை அகற்றி உள்ளனர்.
இதனால் மன உளச்சலும் பெலவினம் அடைந்த உமாராணி 5ஆம் முறை கர்ப்பம் அடைந்த போது கருவை அகற்ற மறுத்தார்.
உமாராணியை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கரு அகற்ற முயன்றது சிவாவின் நாடக காதல் குடும்பம் ஆனால் மருத்துவர் முன்னிலையில் உமாராணி கரு அகற்ற எதிர்ப்பு தெரவித்தார் இதனால் உமாராணியின் கருவை அகற்ற முடியாமல் போனது.

வீட்டுக்கு வந்த உமாராணியை சிவா மற்றும் அவன் குடும்பத்தினர் பணிவாக கவனிப்பது போல் நாடகம் நடத்தியுள்ளனர். நான்கு நாட்களாக உமாராணி பெயரில் உள்ள 24 கோடி மதிப்புள்ள சொத்துகளை சிவா பெயரில் மாற்ற பத்திரங்களில் கை எழுத்துவாங்கியுள்ளனர்.

உமாராணியின் பூர்வீக 24 கோடி மதிப்பில் உள்ள சொத்துகளை தன்வசமாக மாற்றிய நாடக காதல் மன்னன் மற்றும் அவன் குடும்பத்தினர். உமாராணியை தனி அறையில் தள்ளி உணவு அளிக்காமல் சித்தரவதை செய்து அடித்தே உயிருக்கு ஆபத்தான நிலையில் 01-12-2017 அன்று உமாராணியை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பி சென்றனர். சிவா மற்றும் அவன் குடும்பத்தினர் செய்த சித்தரவதையில் படுகாயம் அடைந் து உமாராணி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
செய்தியை அறிந்த தர்மபுரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உமாராணியை கொலை செய்தவர்களை கைது செய்யுமாறு சாலை மறியல் செய்தனர்.
உமாராணியை கொலை செய்து தப்பி சென்ற நாடக காதல் சிவா (எ) கர்ணன் மற்றும் சிவா சாரந்த நாடக காதல் குடும்பத்தினர் கைது செய்யப்பட வேண்டும். தமிழக அரசும் காவல் துறையும் சாதியவாதம் இன்றி கு்ற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

கருத்துகள் இல்லை: