
ஒருமணி நேர போராட்டத்திற்குப்
பின்னர் 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.
அவர்கள் மணப்பாறை, திருச்சியில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். ஐவர்
திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோகத்தில் முடிந்த பயணம்
சோகத்தில் முடிந்த பயணம்
நாகர்கோவிலில் இருந்து திருப்பதி சென்ற சுற்றுலா வேன் விபத்தில் சிக்கிய
சம்பவம் அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இரவு நேரத்தில்
சர்வீஸ் சாலையில் வெளிச்சம் குறைவாக இருந்துள்ளது. வேன் டிரைவர் முன்னால்
சென்ற வாகனத்தை கவனிக்காமல் வேகமாக ஓட்டிச்சென்றதாலேயே விபத்து நேரிட்டதாக
வேனில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். திருப்பதி பயணம் திரும்பா
பயணமாகிவிட்டதே என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்தை தடுக்க முடியாதா?
விபத்தை தடுக்க முடியாதா?
திருச்சி மணப்பாறை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி 5 பேர் மரணமடைந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணப்பாறை அருகே நிகழ்ந்த விபத்தில் 45 பேர்
உயிரிழந்தனர். மணப்பாறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்
வாகனங்களால் நொச்சிமேடு பகுதியிலும் அதன் அருகே உள்ள நெடுஞ்சாலை
பகுதியிலும் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
//tamil.oneindia.com
//tamil.oneindia.com
vikatan ர.பரத் ராஜ் : திருச்சியை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே, லாரியும் வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
துவரங்குறிச்சி அருகே, நாகர்கோவிலிலிருந்து திருப்பதி சென்ற சுற்றுலா வேன்மீது லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக