வெள்ளி, 4 ஜூலை, 2014

கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை! மதுரை காமராஜ் பல்கலை கழகத்திற்கு இன்னும் விடிவில்லை ?

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என்று கூறியும், இந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் மதுரை பேராசிரியர்கள் கே.பி.ஜெயராஜ், ஐ.இஸ்மாயில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனத்தை கடந்த மாதம் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினர். இதனால் தீர்ப்பை எதிர்த்து கல்யாணி மதிவாணன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு இன்று இடைக்கால தடை விதித்தது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: