வியாழன், 3 ஜூலை, 2014

ஷிர்டி சாய்பாபா வழிபாட்டிற்கு எதிராக சுவாமி சங்கராச்சாரி சுவரூபானந்தா போர்க்கொடி !

புதுடெல்லி, சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் என்று சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுவதற்கு பிரபல சாமியார் சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். “யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது” என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர்.இந்த  சங்கராச்சாரிகளின்  சாயம்வெளுத்து  ரொம்ப நாளாச்சு 
பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார். "நமது கடவுகளின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள்" என்று ஸ்வரூபானந்தா சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதற்கு சாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவ்வாறு வழிபாடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். சாமியாரின் இத்தகைய பேச்சுக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் சாய்பாபா கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: