சனி, 16 அக்டோபர், 2010

வீடியோ காட்சி வெளியாகி நிதி வசூலித்த விதம் அம்பலம்.காங்கிரஸ்பேரணிக்கு நிதி வசூலிக்கப்பட்ட விதம

மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொள்ளும் பேரணிக்கு நிதி வசூலிக்கப்பட்ட விதம் குறித்து இரு காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் சோனியா பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்குத்தான் நிதி வசூல் செய்வது குறித்து பேசி சிக்கலில் மாட்டியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.

தங்கள் முன்பு வீடியோ காமரா இருப்பது கூடத் தெரியாமல் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரேவும், காங்கிரஸ் தலைவர் சதிஷ் சதுர்வேதியும் படு சீரியஸாக சோனியா கூட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதி குறித்துப் பேசிக் கொண்டிருந்துள்ளனர் அந்தக் காட்சியில்.

இந்த பேரணிக்காக ஒவ்வொரு அமைச்சரும் ரூ. 10 லட்சமும், முதல்வர் சவான் ரூ. 2 கோடி கொடுத்ததும் பற்றி பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சம் வாங்கினோம். அதை வைத்து தான் செலவு செய்தோம் என்று தலைவர்கள் பேசியுள்ளனர். மேலும், அதில் அவர்கள் முதல்வர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் 2000 பேருந்துகளுக்கு இன்று ரூ. 2 கோடி டெபாசிட் செய்வதாகத் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

மாணிக்ராவ் தாக்கரே மற்றும் சதிஷ் சதுர்வேதி ஆகியோர் பேசியது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், என்னிடம் இந்த விஷயம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இது குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மொட்டையாக முடித்துக் கொண்டார்.

இந்த சர்ச்சை குறித்து முதல்வர் சவான் கூறுகையில்,

வசூலிக்கப்பட்ட பணத்திற்கு முறையான கணக்கை காட்டி, அதை ஒழுங்காக செலவழித்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று நான் நினைக்கிறேன். மும்பையில் தசரா பேரணிகளுக்கு செலவாகும் பணத்தைப் பற்றியும் பாருங்கள்.

காங்கிரஸ் பேரணிக்கான செலவுக் கணக்கு முறையாக உள்ளது. அதில்

கருத்துகள் இல்லை: