சனி, 16 அக்டோபர், 2010

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டோர் நாடுகடத்தப்படும் சந்தர்ப்பம் குறைவு..

தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட 130க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய சந்தர்ப்பமில்லை என தாய்லாந்து நாட்டிற்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி சுனை பாசுக் தெரிவித்துள்ளார். தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகாரத்தறை ஊடகப்பேச்சாளர் தனி தொங்பஹாடி, கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறியமையாலேயே கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்கடத்தல்களை தவிர்க்கும் முகாமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றில் 500 மேற்பட்டவர்கள் கனடாவிற்கு சென்றிருந்மை குறிப்பிடத்தக்கது. ...............................

கருத்துகள் இல்லை: