சனி, 18 செப்டம்பர், 2010

இதர தமிழ் அமைப்புக்கள் அக்கறை காட்டவில்லை,கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இடம்பெற்ற கணனித் திருட்டு

கனடாவின்  தமிழர் நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸில் இடம்பெற்ற கணனித் திருட்டுக் குறித்து பல்லினப் பத்திரிகைளும் பொது அமைப்புக்களும் அக்கறை கொண்ட அளவில் ஒரு வீதமாவது இதர தமிழ் அமைப்புக்கள் அக்கறை காட்டவில்லையென Tamilwin ல் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கப்பல் விவகாரத்திலும்  கனடியத் தமிழ்க் காங்கிரஸ் செயற்பட்டு வந்தவேளையில், இவ்விவகாரத்தில் ஈடுபட இதர தமிழ் அமைப்பு ஒன்று முயன்ற போதும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

இந் நிலையில் இக் கணனித் திருட்டுக் குறித்து பலவேறு அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்த போதும் இதர தமிழ் அமைப்புக்கள் ஏதும் இவ்விவகாரத்தில் அக்கறை கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவிட்டன.
இந்நிலையில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள தொம்ஸன் பூங்காவில் நடத்தும்  நிதி சேகரிப்பு நடைபவனியில் ரொறன்ரோ பொலிஸார்   பங்களிக்கவுள்ளதாக ரொறன்றோ பொலிஸ் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: