வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இத்தாலி கீதானந்தா ஆச்சிரமத்தில் தொடரும் கோஷ்டி மோதல்கள

புலம்பெயர் நாடுகளில் தொடரும் கோஷ்டி மோதல்கள்
இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களில் இருவர் படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எஸ்.நிருஜன்(வயது 24), ஏ.சுதர்சன்(27) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர். இருவரும் அங்கு Genoa நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு காதல் விவகாரமே மோதலின் காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர். இம்மோதலில் கத்திக் குத்துக்கள் இடம்பெற்றன. ஏனைய இரு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சம்பவம் இடம்பெற்றபோது ஆச்சிரமத்தில் 500 பக்தர்கள் வரை திரண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்துக்கு ஆச்சிரம நிர்வாகிகள் மன வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: