வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சரத்பொன்சேகாவுக்கு 3 வருட சிறைதண்டனை பரிந்துரை

இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும்,  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ராணுவ கோர்ட் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்துள்ளது
சரத்பொன்சேகா மீது ஆயுத மோசடி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்த நான்கு குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப் பட்டதையடுத்து,  அவருக்கு  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தீர்ப்பில் 3 வருட சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐநா சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தற்போது நியூயார்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, நாடு திரும்பிய பின்னர், இந்த தீர்ப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: