வெள்ளி, 17 செப்டம்பர், 2010

’அசின்:அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’என்று

இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்:
விஜய் பங்சனில்  அசின் கன்டிஷன்
இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும் நடிகை அசின் இலங்கை சென்றார். இதனால் விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிடுவதி சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
என்ன நடந்ததோ தெரியவில்லை.   திடீரென்று சரத்குமார்  அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது.
அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
தமிழகத்திலும், தமிழ்த்திரையுலகிலும் அசின் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால்  இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. 
இந்தப் படத்தின் நாயகி அசின் மீது தமிழ் சினிமா  அமைப்புகள் என்ன நடவடிக்கை  எடுத்தன என்பதை தெரிவித்தாக வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் இனி இலங்கை தமிழர் விவகாரத்தில் சரத்குமார் சினிமாக்காரர்கள் தலையிடுவதற்கு அருகதையற்றவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரவு சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் காவலன் பட விசயமாக நடிகர் விஜய்,நடிகை அசின், நடிகர் வடிவேலு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
  செய்தியாளர்கள் சந்திப்பு என்று சொல்லிவந்திருந்தாலும் விஜய்,  வாயையே திறக்கவில்லை. சில கேள்விகளுக்கு மட்டும் வாயை திறந்தார்.  ‘’இந்தப்படம் செப்டம்பரில் ரிலீசாகுது’’ என்று சொன்னார்.
நடிகை அசினிடம் இலங்கை சென்றுவந்த விவகாரம் பற்றி கேட்டபோது,  ‘’அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’என்று கோபமாக கூறினார்.

கருத்துகள் இல்லை: