வியாழன், 16 செப்டம்பர், 2010

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் ஆகியோரை அரசு ஒரம்கட்டி விட்டது. ஐ.தே.க பொதுச் செயலாளர்.

கேள்வி - பா.உ சிறிரங்கா , நாட்டின் ஜனாதிபதியின் புத்திரர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளையோருக்கு நாளை எனும் அமைப்பில் ஓர் முக்கிய பதவியை வகிப்பதாகவும், அரசாங்கத்துடன் மிகுந்த உறவை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்துள்ளபோதும் , ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமைக்கான பின்னணி அல்லது மர்மம் என்ன?

பதில் - அரசியல் ரீதியாக இவர் விடயத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையின் முன்னணி ஊடக ஸ்தாபனம் ஒன்றின் தலைவரும் சில ஊடக முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவருக்கு எமது கட்சியில் போட்டியிட அனுமதி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு தாவமாட்டோம் என இவர்கள் வாக்குறுதியும் வழங்கிவிட்டே கட்சியில் போட்டியிட்டார்கள். அவர்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும் எண்ணம் இருந்திருந்தால் அவர்கள் அங்கே போட்டியிட்டிருக்க வேண்டும். இது அவர்கள் கட்சிக்கு செய்த அநீதி மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்த அநீதியாகும். இவர்கள் அனாதைகள் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

http://www.ilankainet.com/2010/09/blog-post_2189.html

கருத்துகள் இல்லை: