வியாழன், 16 செப்டம்பர், 2010

ராகுல:் தமிழகத்தில் காங்., ஆட்சி அமைக்க முடியுமா ? : நிறைய முயற்சி செய்ய

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக முயற்சி செய்ய வேண்டியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் மேற்குவங்கத்தில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார் .  மேற்குவங்கத்தில் இளைஞர் காங்கிரஸ் குறித்து விழிப்புணர்வு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் .  அவர் நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
மம்தாவுக்கு தலைவணங்க முடியாது :  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதே சமயத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தலை வணங்க முடியாது என்றார். மேற்குவங்க ஏழைகளுக்கு என ஒரு பிரிவாகவும், இடதுசாரிகளுக்கு என ஒன்றாகவும் பிரிந்திருக்கிறது என்றார்.

ஏழைகளின் மேற்குவங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ப‌தே காங்கிரசில் லட்சியம் என்றும். இந்த கொள்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார். மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவித்தது கண்டனத்துக்குரியது . மேற்குவங்கத்தில் ஒரு நல்ல, மக்களின் மரியாதைக்குரிய கூட்டணி அமைய வேண்டும் என்பதே தனது நோக்கம்.

ஒமருக்கு ஆதரவு : காஷ்மீரில் அமைதி திரும்ப இளைஞர்களை மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் இணைக்க வேண்டும். விரைவில் காஷ்மீருக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளயிருப்பதாகவும் கூறினார். காஷ்மீர் பிரச்னையில் அரசு முழு நேர கவனம் செலுத்த வேண்டும். ஒமர் அப்துல்லாவுக்கு ஆதரவு  அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் 14 லட்சத்து 50,000 இளைஞர்கள் : தமிழக காங்கிரஸ் நிலை குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதற்க அவர் பதில் அளித்த போது : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. முதன் முதலில் தமிழகத்தில் இளைஞர்கள் காங்கிரசுக்காக உறுப்பினர்களை சேர்க்கும் போது 35,000 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 14 லட்சத்து 50,000 பேராக அதிகரித்துள்ளது.

இது சாதாரண விஷயம் இல்லை. இளைஞர் காங்கிரசில் பல்வேறு தரப்பிலிருந்தும் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இளைஞர்கள் இதற்கு ஒரு சான்றாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.
kamalanathan - rajmundry,இந்தியா
2010-09-16 20:56:40 IST
ஆந்திராவை சுருட்டியது போதும் .தமிழ்நாட்டை சுருட்ட வேண்டாம்....
dhanaraj - thungapuram.,யுனைடெட் கிங்டம்
2010-09-16 20:38:55 IST
ராகுல் கல்யாணம் பண்ணுங்க. அப்புறம் யோசிக்கலாம்....
k.Nagarajan Vice indian youth congress - panagudi,இந்தியா
2010-09-16 20:15:17 IST
மூன்றாவது அணி அமைக்க வேண்டும். அதில் பாமக,தேமுதிக, சமக மற்றும் சில கட்சிகளை சேர்க்க வேண்டும்...
Dindigul Ramaraj - Dindigul,இந்தியா
2010-09-16 19:58:18 IST
Please change Tamil Nadu Presedent. Mr. Rahul do it fast...????????????...
ராஜேஷ்.m - nellai,இந்தியா
2010-09-16 19:14:27 IST
திரு.ராகுல் அவர்களே kandippaka ஆட்சி அமையும்...
வெ ம வினோத் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 19:09:31 IST
நாட்டை குட்டிசுவராகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். நீங்கள் பிரதமர் ஆகாமலேயே உங்க கட்சி மத்திய அமைச்சர்கள் இப்படி ஊழல் செய்கிறார்கள். நீங்கள் வந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்....
2010-09-16 19:07:31 IST
உயர் திரு ராகுல் காந்தி அவர்களே வணக்கம் . என்ன தமிழ் நாடு மக்கள் உங்கள் குடும்பத்தை மறக்க மாட்டார்கள். ஆனால் கச்சதீவை விட்டு கொடுத்தது இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக தமிழன் படுகொலைக்கு காரணமானவர்களை எப்போதும் மறக்க முடியாது. சீனா காரன் சிறிலங்காவில் ராணுவத்தில் உள்ளார்கள் என்று தெரிந்தும் நாட்டை பற்றில்லாம் கவலை படாமல் தங்கள் இனம் தான் சிங்களர்கள் என்பதை நிருபித்து விட்டீர்கள். போதும் சாமீ தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே என்ற ஹிட்லரை வளர அனுமதி கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் வாழ்க. உங்கள் குலம் வாழ்க. ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து சாவட என்பதே பழமொழியாக்கி விட்டீர்கள். ஆனால் ஒன்று சொல்கிறேன். ஒட்டு மொத்த தமிழ் நாடும் மீனவர்களும் சேர்ந்து பார்லிமெண்டரி தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழன் யார் என்று தெரியும். நன்றி தினமலர் ஆசிரியர் அவர்களே....
ஜோதி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 18:49:54 IST
நிச்சயம், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறுபடியும் அமைக்கும் . ஜெய் ராகுல் ஜி...
elango - Sharjah,இந்தியா
2010-09-16 18:26:07 IST
A person who gets elected is not a leader, but a follower of those electing him. Also a leader is captivated by the vision and operates with everyone to make his vision come true....
jothi - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 18:06:39 IST
நிச்சயம், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறுபடியும் அமைக்கும் . ஜெய் ராகுல் ஜி...
Velmurugan - Madurai,இந்தியா
2010-09-16 17:48:46 IST
ராகுல் நீங்கள் சின்ன பிள்ளை தனமா பேச வேண்டாம். உங்கள் தமிழ்நாடு கனவு பலிக்காது. கொஞ்சம் ஓய்வு எடுக்கவும்...
சா. ரவி - Jaipur,இந்தியா
2010-09-16 17:41:48 IST
ராகுல் ஜி முதலில் தமிழ்நாட்டில் தொண்டர்களை உருவாக்குங்கள். தமிழ் நாட்டிலே தொண்டன் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் தான். எல்லோருமே தலைவர்கள். பஹுஜன் சமாஜ், சிவ சேனா (மும்பாயில் தமிழர்களை அழிக்க உருவான கட்சி) இவற்றுக்கு கூட தமிழகத்திலே தொண்டன் உண்டு....
c.ramasamy - tup,இந்தியா
2010-09-16 17:36:00 IST
நீங்க ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தொண்டர்கள் வேண்டும்...உங்கள் கட்சியில் தலைவர்கள் தானே இருக்கிறார்கள்...அதுவும் கோஷ்டியோடு.......
rpsenthilan - riyadh,சவுதி அரேபியா
2010-09-16 17:22:34 IST
திருவாளர் கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா, அவர்களது கருத்தை ஆமோதிக்கிறேன்.,...
Kim - TN,இந்தியா
2010-09-16 17:08:03 IST
14 லட்சம் காங்கிரசு உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு திராவிட கட்சியில் மற்றொரு உறுப்பினர் அட்டை இருக்கும். நல்லா தேடி பாருங்க ராகுல் !!...
johnson.t - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-16 16:56:53 IST
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி. தமிழகத்தில் அடுத்த ஆட்சி காங்கிரஸ். அதை யாராலும் மாற்ற முடியாது....
KOPALAN - LONDON,யுனைடெட் கிங்டம்
2010-09-16 16:46:52 IST
THANGABALU இருக்கும் போது காங்கிரஸ் நோ கவலை பா. அவருக்கு அவரு காலேஜ் ரொம்ப முக்கியம். வடிவேலு பேக்கரி வாங்கின கதைய விட கேவலம்பா...
நல்லதம்பி - Tirupur,இந்தியா
2010-09-16 16:28:08 IST
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கண்டிப்பாக விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லை எனில் ஆட்சிக்கு வரவே முடியாது.அது அவர்களது கனவாகவே ஆகி விடும்.... 
காவிரி யை பற்றி தெளிவாக சொன்னால் ராகுலுக்கு வோட் கிடைக்கும். தமிழ் நாட்டின் உயிரான காவேரி யை எதிபார்க்காதிர்கள் என்று சொன்ன ராகுலுக்கு என்ன கிடைக்கும், அடுத்த தடவை பேசினால் தர்ம அடி கிடைக்கும், ௦...
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-09-16 15:29:22 IST
அப்துகலாம் நெறைய கனவு காண சொன்னார்!!அதை ராகுல் நிறைவேற்றி வருகிறார்.இரண்டு கோடி வன்னியர் இருப்பதாக கூறும் பாமக கூட்டணிக்கே திண்டாடும் போது ஐம்பதாயிரம் ஆட்களை வைத்து கொண்டு என்னமா கூத்தடிக்கிரானுவோ?...
லக்ஷ்மினரயணன்.r - கேம்ப்சென்னை,இந்தியா
2010-09-16 15:23:15 IST
வேலை செய்யாத தமிழ் நாட்டு தலைவர்கள் காங்கிரசில இருக்கற வரைக்கும் தமிழ் நாட்டுல காங்கிரஸ் ? அப்புறம் யாரு யாரு தொண்டருநு ராகுல் வந்து சொல்லட்டும், ஏன்னா எல்லோரும் தலைவருங்கோ...
esspee - trichi,இந்தியா
2010-09-16 15:22:03 IST
தமிழக காங்கிரசில் முதலில் அடுத்தவர் வேட்டியை உருவாமல் பார்த்துகொண்டால் அதுவே நல்லது. எப்போ எப்போ காங்கிரஸ் மீட்டிங் நடக்குதோ அன்னைக்கெல்லாம் ஆம்புலன்சும், செருப்பு வியாபாரிக்கும் நல்ல வியாபாரம். கட்சியில் இருகிறதே பத்து பேர். அதுல பதினஞ்சு குரூப்., இருவத்தஞ்சு அடியால்.இது எப்படி விளங்கும் . ஊத்தி சங்கு ஊத வேண்டியது தான்...
veera - chennai,இந்தியா
2010-09-16 14:58:04 IST
First be bold enough to cut ties with DMK .Keep alliance with DMDK PMK Let Sonia and Rahul visit entire Tamilnadu right from now .Congress man will be the CM next time...
கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா
2010-09-16 14:55:16 IST
ஏன்?இந்தியாவை சீரழிப்பது போதாதா?தமிழகத்தில் அந்த வேலையைத்தான் கலைஞர் தாத்தா சிறப்பாக செய்துகொண்டிருக்கிறாரே. உங்களுக்கு அடிமைகள் தான் பிடிக்கும். மக்கள் செல்வாக்கோட ஒருத்தர் வளர்ந்துட்டா பொறுக்காதே. அவரை மொதல்ல ஓரம் கட்டி, மட்டம் தட்டினாத்தான் உங்களுக்கு தூக்கமே வரும். உங்க பாட்டி இந்திரா, காமராஜ் செல்வாக்கு பிடிக்காம, அவரை ஒழிக்க, காங்கிரசை பிளந்தார். அன்று பிடித்தது ஏழரை சனி. உங்கள் நேரு குடும்பத்துக்கே இந்தியா உங்களின் ஏக போக சொத்து என்று நினைப்பு. மத்தியில் வேறு எவரையும் ஆட்சியில் அமர விடமாட்டீர்கள். உங்கள் நரி புத்தியை பயன்படுத்தி, அந்த ஆட்சியை கவிழ்த்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பீர்கள். மாநிலங்களிலும் உங்கள் கட்சி தலைவர்களை வளர விடாமல் கோஷ்டிகளை நீங்களே வளர்த்து விட்டு, வேடிக்கை பார்ப்பீர்கள். உங்கள் குடும்பத்தால் இந்த நாடு படும் கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா? வேண்டாம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி. கழகங்களால் மக்கள் வரிப்பணம் தான் பாழாகிறது. ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை பிரித்து, அடித்துக்கொள்ள வைத்து விடுவீர்கள். பெயரளவிலாவது இப்போது தமிழகத்தில் ஒற்றுமை இருக்கிறது. உங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியால் அதுவும் போய் தமிழகம் காஷ்மீராகி விடும். நீங்கள் மத்தியில் இருந்தே ஒழிய வேண்டும் என்பது தான் உண்மையான தேச பக்தர்களின் பிரார்த்தனை. அது பலிக்கட்டும். தமிழகம் பிழைக்கட்டும்....
புகழேந்தி சா - bangkok,தாய்லாந்து
2010-09-16 14:22:52 IST
திராவிட கட்சிகள் இருக்கும்வரை ஆட்சி என்பது வெறும் கனவு....
மணி - சென்னை,இந்தியா
2010-09-16 14:22:45 IST
இவரின் அப்பா ராஜீவ் தனியாக ஜெயித்துக்காட்டுகிறேன் எனக்கூறி, 13 முறை தமிழகம் வந்து சாக்கடைப் பாலத் திறப்பு விழா வரை கலந்து கொண்டு, கடைசியில் 26 (13x2?) சீட் வாங்கினார்! பல ஊரில் டெபாசிட் வேறு காலி!.இத்தனைக்கும் தூர்தர்சன்(சன் டிவி வருவதற்குமுன்) ரேடியோ கூட இவர்களுக்காக முழுநேரம் உழைத்தன! அவருக்குத் தெரியாதது என்னவென்றால், தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனை விலைக்கு வாங்குவது மிகச் சுலபம்!...
காதர் - கோலாலும்பூர்ன்,மலேஷியா
2010-09-16 14:13:47 IST
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ராகுல் காந்தி போன்ற நாலு தலைவர்கள் வேண்டும்...
முகமது - ரியாத்,இந்தியா
2010-09-16 13:41:24 IST
Bismillah/In the name of God, I think, after some years, DMK and ADMK will join together or go for Alliance against Congress. Let congress also come to power in Tamil Nadu....
balaji - Delhi,இந்தியா
2010-09-16 13:13:13 IST
காங்கிரஸ் ஆட்சி அமைக்க முதலில் ராகுல் தமிழ் பேச முயற்சிக்க வேண்டும்.தமிழ் பேசினால் தமிழ் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் .சோனியா மேடம் கூட தமிழ் பேசி 231 தொகுதிகளை பார்த்து மக்களை சந்திக்க வேண்டும் ..ஆல் தி பெஸ்ட் ராகுல் .....
கணேஷ் - சென்னை,இந்தியா
2010-09-16 13:11:54 IST
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...
solomon - kovilpatti,இந்தியா
2010-09-16 12:38:28 IST
தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்கும்வரை ஆட்சி என்பது வெறும் கனவு. யார் தோளிலாவது ஏறிக்கொண்டு சீட் பிடிக்கலாம். தனித்து நின்றால் டெபாசிட் காலி....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-16 12:32:52 IST
ஆசை இருக்கு. ஆனால் காமராஜ், கக்கன், சி.சுப்ரமணியன், வெங்கட்ராமன் போன்ற செயல் திறன்மிக்க தமிழ் தலைவர்கள் இல்லையே? அப்படியே ஆட்சியை பிடித்தாலும் எதிர் கட்சியே தேவையில்லை இப்போ இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு....
KIm - TN,இந்தியா
2010-09-16 12:31:16 IST
ஹ ஹ ஹ ஹ !! ராகுலுக்கு தமிழ் நாடு வரலாறு தெரியவில்லை. காமராஜர் தோற்றதுக்கு காரணம் அவர் காங்கிரசில் இருந்ததுதான் ! காங்கிரசு மற்ற மாநிலங்களில் குப்பை கொட்டலாம். தமிழ்நாட்டில் ஒரு ஜீரோ !! முதலில் தனித்து நின்றால் வேட்பாளர் மனைவி வோட்டு காங்கிரசுக்கு விழாது ஹ ஹ ஹ் !ராகுல் பையா நீ பேசியது கல்கத்தாவில் OK. ஆனால் தமிழ்நாட்டில் இது பெரிய காமடி தெரியுமா !!பொய் இல்ல நீ வேண்டுமானால் தங்கபாலு சிதம்பரம் அல்ல இளங்கோ கிட்ட கொஞ்சம் கேட்டு பாரு !சிதம்பரத்த ஜெய்க்க வைக்க பெரும்பாடாகி விட்டது !! திமுக மத்தியில் பவர் தேவை. அதுக்காக காங்கிரஸ் தேவை. இது தான் உண்மை. கேட்டுபாரு கண்ணு !! அண்ணா காங்கிரசுக்கு சங்கு ஊதி 43 வருஷம் அகுது !!தினமலர் தேங்க்ஸ்...
வி கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-09-16 12:15:35 IST
சுய பலம் தெரிந்த பின் பேட்டி கொடுப்பது நல்லது. காரணம் ஒற்றுமை என்றால் என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாது....
ர.ராஜேந்திரன் - Chennai,இந்தியா
2010-09-16 12:08:08 IST
ராகுல் காந்தியின் நண்பர் ஓமர் அப்துல்லாவிடம் ஆட்சியை பிடித்து கொடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் நிலவும் வன்முறை நிலைமை தான் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்கிறாரா ராகுல்????...
krishna - chennai,இந்தியா
2010-09-16 11:59:04 IST
இருநூறு இடங்களில் டெபாசிட் போகும், அஞ்சு இடங்களில் ஜெயிக்கும்.அதுவும் ரொம்ப கஷ்டம்

கருத்துகள் இல்லை: