வியாழன், 3 ஜூன், 2010

ஜெகத் கஸ்பார ,இந்திய - இலங்கை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’????

இந்திய - இலங்கை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்: ஜெகத் கஸ்பார்
 இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செயல்படுத்த இந்திய - இலங்கை கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நாம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பார்,
 ’’இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தனித் தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும். எனினும் அதற்கு முன்பாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் நடைபெற வேண்டியது மிக அவசியமாகும்.
 இதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு அமைப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது. எனவே, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, இந்திய - இலங்கை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: