புதன், 2 ஜூன், 2010

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மேற்படி புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.      இவர்களிடமிருந்து ரீ – 56 ரக துப்பாக்கியொன்று, இரு மகசின்கள் மற்றும் 60 துப்பாக்கி ரவைகள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன்ன.
மேற்படி ரீ – 56 ரக துப்பாக்கியானது கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனது என அடயாளம் காணப்பட்டுள்ளது என்று இராஜாங்கனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தா

கருத்துகள் இல்லை: