வெள்ளி, 4 ஜூன், 2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி இவர்களை மீள்குடியமர்த்த பணிக்கப்பட்டுள்ளது . அதே வேளை மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ கடந்த வாரம் இந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும் என தெரிவித்தமை குறிபிடதக்கது.

முல்லைத்தீவு மாட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இம்மாநாட்டின் போது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்க படுகின்றது. இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலமையில் இடம்பெற்ற உயர் மாநாட்டிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் கண்ணி வெடிகளை மிக விரைவில் அகற்றி மக்களை மீள்குடியமர்த்துமாறும் வியாபார நோக்கத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் மக்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்து அரசாங்க அதிபர் ஊடாக அதனை இராணுவத்திடம் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகின்றது .

கருத்துகள் இல்லை: