புதன், 28 ஜூன், 2017

சீமான் ஆரியர்கள் வடவர்கள் விரும்புவதை நிறைவேற்ற துடிக்கிறார்!

Damodaran: நியூஸ் 7 சானலில் வியூகம் நிகழ்ச்சியில்...
சீமானின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லமுடியாமல்
Chief editor முகம் வெந்து கரியாகி அசடு வழிந்தான் அந்த நெறியாளர் ( பெயர் தெரியாது )
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விவாதம் அது...
தமிழரை தமிழன் தான் ஆளவேண்டும்
யார்வேண்டுமானாலும் இங்கே வந்து வாழட்டும்
ஆனால் தமிழன் தான் ஆள வேண்டும்
என்பதுதான் சீமானின் மைய கருத்து.
சீமான் முன் வைத்த வாதங்கள் அற்புதம்
தமிழரை நிச்சயம் எழுச்சி பெற செய்யும்.
அவருடைய கருத்துகள் எல்லாம் எனக்கு என்னுடைய கருத்தாகவே உணர்ந்தேன்...
ஆனால்....ஆனால்....ஆனால்....

தமிழர் எழுச்சி தமிழர் ஆட்சி என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு
தமிழர் வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் தமிழின எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட நீதிக்கட்சி திராவிட இயக்கம் திமுக வை ..
தமிழின பகைவர்களாக சித்தரிக்கும் கீழ்மையை கயமையை
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மணப்பாறை மாடும் விவசாயியும் .. அடாவடி செய்த பூஜ்ய சுவாமி சிரி செண்டலங்கார ஜீயர்,




Specialcorrespo: மணப்பாறை மாட்டுச் சந்தையில் மாடுகள் வாங்கிய, சில
விவசாயிகள் அவற்றை லாரியில் ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள தேவன்புதூருக்குச் சென்று கொண்டிருந்தனர். பழநி அருகே லாரி சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த பூஜ்ய சுவாமி சிரி செண்டலங்கார ஜீயர், லாரியில் ஐந்து கன்றுகள், இரண்டு மாடுகள் இருப்பதைப் பார்த்து லாரியை மடக்கி பழநி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் போலீஸார், புகார் எழுதிக்கொடுத்திட்டுப் போங்க’ எனச் சொன்ன தகவல் கேள்விப்பட்டு, விவசாயிகள் மேல நடவடிக்கை எடுக்காத காவல்துறையை திட்டி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல்நிலையம் முன்பாகக் கூடி கோஷம் எழுப்பவே ..

திருச்சி. - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; ஆயர் இல்லம் முற்றுகை .பதட்டம்!

திருச்சியில் கருமண்டபம் குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான முன்புறம்
உள்ள சுமார் 5000 சதுர அடி உள்ள இடத்தை திருச்சி மறைமாவட்ட பிஷப் ஆண்டோனி டிவோட்டா மற்றும் பிற மறை மாவட்ட 5 பிஷப்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி திருமண மண்டபம் கட்ட முயற்சி செய்து ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்றதை எதிர்த்து திருச்சி மறைமாவட்ட பங்கு மக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து, ஆரம்ப கட்ட வேலையை நிறுத்தி மாதா சுருபத்தை அந்த இடத்தில் நிறுவி போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு 9.00 மணிக்கு ஆயர் அலுவலகத்திற்கு கருமண்டபத்தை சேர்ந்த பங்கு மக்கள் அனைவரும் கையில் மெழுகு வர்த்தியுடன் திருச்சி மேலப்புதூரில் உள்ள பிஷப் வீட்டிற்கு யாரும் தெரியாமல் 50 பேருக்கு மேல் உள்ளே புகுந்துள்ளனர்.

குஜராத் பாணி ... மேற்குவங்கத்தில் பாஜகவின் மதக் கலவரத் திட்டம்

மேற்குவங்க மாநிலம், வடக்கு டினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்காபூர் என்னும் கிராமத்தில் கடந்த 22 ஜூன் 2017 அன்று, மாடு திருட முயன்றதாகக் கூறி மூன்று முசுலீம் இளைஞர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட நசிருதீன் (24), நசிருல் ஹக்(28) மற்றும் முஹம்மது சமிருதீன்(32) ஆகியோர் சாதாரண கட்டிடத் தொழிலாளர்களாகவும், சிறு வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இப்படுகொலை குறித்து, வடக்கு டினாஜ்பூர் போலீசு சூப்பிரண்டெண்ட் அமித்குமார் பாரத் கூறுகையில், அவ்விளைஞர்கள் மூவரும் கால்நடைத் திருடர்கள் தான் என்றும், அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார்.

Shahjahanr: மாற்று கருத்துக்களை கண்ணியத்தோடு சொல்லுங்க .. . சதிவலைகளில் சிக்கி விடாதீர்கள்

 இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது.
மாற்றுக்கருத்துகளை வைக்கும்போது நாகரிகமான முறையில் பேசுங்கள். கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துங்கள்.
ராமநாதபுரத்தில் கலவரம் ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடனேயே சங்கிகள் சில வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள். அஸ்வின் குமாரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்கியதாக கேடி ராகவன் எழுதிய பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக். ஆரம்பத்தில் முஸ்லிம்களை ஆபாசமாகத் திட்டி ஏகப்பட்ட கமென்ட்கள் எழுதியிருக்கிறார்கள் சங்கிகள்.
பிற்பாடு உண்மை வெளியாகி, அஸ்வின் குமாரைத் தாக்கியவர்கள் இந்துக்கள்தான், முன்விரோதம்தான் காரணம் என்று தெரிந்த பிறகு, சங்கிகள் மாயமாகி விட்டார்கள். முஸ்லிம்கள் பலர் அந்தப் பதிவில் கமென்ட் செய்திருக்கிறார்கள். அவற்றில் பல கமென்ட்கள் மிக ஆபாசமானவை, அருவருப்பானவை.

திறன் நகரங்கள் பங்குச் சந்தையில் தனியார் கொண்டாட்டம் Smart Cities: Companies Profiting from Urban Challenges

Smart thing about ‘smart solutions’ is that once installed, it makes the city permanently dependent on the private service provider, much like how your dependence on your smartphone is far greater, and of many dimensions, than it ever was with your non-smartphone. Whether or not an urban problem is solved by a smart city project, a market would have been created.
உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளைப் போக்க, நகரங்களுக்கு மேலும் மேலும் நிதி தேவைப்படுகின்றது. நகர நிர்வாகங்கள் நிதி திரட்டலுக்கான புதிய வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நகராட்சி பங்கு பத்திரங்கள் (Municipal Bonds) அவ்வாறான வழிவகைகளில் ஒன்று. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அவை (நகராட்சி பங்கு பத்திரங்கள்) பயன்படுத்தப்படுவதில்லை என்பது உண்மை தான். எனினும் மாறி வரும் சூழலில் நகர மறுநிர்மானப் பணிகளுக்கு முதலீட்டின் தேவை அதிகரித்திருப்பதை கணக்கில் கொண்டு நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” – என்று பேசியுள்ளார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு.

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது.
தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும் மிகப்பெருமளவிலான விஷயங்களை நெறிப்படுத்த வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தக் மைல்கல்லை இந்த இணையப் பெரு நிறுவனம் அடைந்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள் இதோ.
வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம்
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஃபேஸ்புக் தன்னைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. அக்டோபர் 2012-இல் 100 கோடி பயனாளிகளை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தலித்தியம் என்பது இவர்களுக்கு தனித்துவத்தை அளிக்கின்ற ஒரு விற்பனை லேகியம்.

kavitha Sornavalli :சமூக நீதி என்ற பதமே தலித் விடுதலையை நோக்கி நடந்த
அண்ணல் அவர்களால்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அனைவருக்கும் சம உரிமை என்பதை நான் இங்கு தலித் விடுதலைக்காக போராடுவது என்ற அளவில் தலித்தியமாக முன்னிறுத்தி பதில் அளிக்கிறேன்.
தலித்தியம் என்ற சரக்கு சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறதா ? என்றால் ஆமாம்.
யாரும் புகுந்திராத காட்டிற்குள் வழித்தடத்தை ஏற்படுத்தி தரும் யானையைப்போல சாதீய சிக்கல்களால் மூடப்பட்டிருந்த இந்திய சமூகத்தில் தங்களது திடமான கொள்கைளின் மூலம் வழியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அண்ணலும் பெரியாரும்.
அந்த வழியில் விரும்பி பயணிக்கும், சாதி என்கிற தோலை உரித்து எறிந்த பிற சாதி இளைஞர்கள் (அவர்கள் குறைந்த அளவே என்றாலும்), பகுத்தறிவின் நீட்சியாகவே தலித்தியத்தை பார்க்கிறார்கள். சமூக பரப்பில் தலித்துகளுக்கான நீதி என்பது தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் வலியை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தலித்தியம் என்னும் தேரை அசுர வேகத்துடன் இழுத்துச் செல்ல தோள் கொடுக்கிறார்கள். தலித்தியம் பற்றி பேசுகிற அனவைரையும் கொண்டாடுகிறார்கள். இங்குதான் தலித்தியத்தை மிகச்சிறந்த விற்பனை பொருளாக சந்தை விரிக்கிறார்கள் வியாபாரிகள்.

News 7 டிவி ... பார்ப்பான் எந்த காலத்திலடா உண்மை பேசினான்? S.V.சேகர் + நாராயணன் அடாவடி!


யோகா: கலையா? அரசியலா?” நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமாறனை நேரடியாகவே மிரட்டினார், பாஜக-வின் நாராயணன். அவரது மிரட்டல், கூச்சலைத் தொடர்ந்து நிகழ்ச்சியும் பாதியில் முடிந்தது. அதை முழுவதும் முடிப்பதற்கு களமிறங்கினார் பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர்.
ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் நாராயணன் கூறிய மிரட்டலை நடைமுறைப்படுத்தியதை விளக்குகிறார். நியூஸ் 7 தொலைக்காட்சி உரிமையாளரான வைகுண்டராஜனுக்கு போன் போட்டு ஏன் இப்படி பிராமணர்களை திட்டுவதை அனுமதிக்கிறீர்கள் என்று உரிமையுடன் அண்ணாச்சியிடம் கேட்டாராம். அண்ணாச்சியும் உடனே அப்படி பேசியவனை இனி உள்ளே விடமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தாராம். இதில் அவன் இவன் என்று ஒருமையில் பேசுகிறார் சேகர்.
அதே போல விவாதங்களில் அடாவடி செய்யும் பாஜக பேச்சாளர்களை புறக்கணிப்பது தொடர்பாக சி.பி.எம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் திமுக தரப்பில் ஒருவர் கலந்து கொள்ள இருந்தாராம். உடனே ஸ்டாலினுக்கு போன் போட்ட சேகர், அதை எடுத்துச் சொன்னாராம். பிசியாக இருந்த மு.க.ஸ்டாலினும் உடனே சம்பந்தப்பட்ட தி.மு.க நபரை போகவேண்டாமென தடுத்து விட்டதாக சேகரிடம் கூறினாராம்.

சாதி அடிப்படையில் விவாதம் ஏன்? குடியரசு தலைவர் வேட்பாளர் மீராகுமார்.. சாதிப் பெயர்களை கைவிட ...


ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், ''ஜனாதிபதி வேட்பாளரை, அவரது தகுதி அடிப்படையில் பார்க்காமல், சமூகம் அடிப்படையில் விவாதிப்பது கவலை அளிக்கிறது,'' என, தெரிவித்துள்ளார்.>ஜனாதிபதி தேர்தல், ஜூலை 17ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் கவர்னரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான, ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.
இதையடுத்து, பீஹாரை சேர்ந்த மற்றொரு தலித் தலைவரும், லோக்சபா முன்னாள் சபாநாயகருமான மீரா குமாரை, ஐ.மு., கூட்டணி சார்பில், காங்., களமிறக்கியது. ;இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த மீரா குமார் கூறியதாவது: இந்தியவரலாற்றில் பல முறை, உயர் சமூகத்தை சேர்ந்த இருவர், ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அப்போதெல்லாம், ஜாதி அடிப்படையில், விவாதங்கள் நடக்கவில்லை. இந்த முறை, இரண்டு தலித் தலைவர்கள், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சவுதியில் விற்கப்பட்ட சென்னை பெண் மீட்பு .. வீட்டு பணிப்பெண்களை செல்வதை தடுக்க வக்கற்ற அரசுகள்

devarajan. சென்னை: சவூதியில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி விற்கப்பட்ட சென்னைப் பெண்ணை, புகாரின் பேரில் சென்னைப் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் சந்தான காளீஸ்வரி. கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். அவரது குடும்ப வறுமையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் ஒருவர் அணுகியுள்ளார். இதனடிப்படையில், திருவல்லிக்கேணியில் உள்ள அட்லான்டிக் ஏஜென்ஸி உரிமையாளர் தனபால் மூலம் சவூதி அரேபியாவுக்கு கடந்த மாதம் அப்பெண்ணை அனுப்பியுள்ளார்.
ரூ. 1 லட்சத்துக்கு விற்பனை
சவூதி அரேபியாவில் 25 பேர் கொண்ட ஒரு வீட்டில், 24 மணி நேரமும் உணவு, உறக்கமின்றி பணியாற்றிய போதுதான், ஒரு லட்சம் ரூபாய்க்கு தாம் விற்கப்பட்டது அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
பாஸ்போர்ட் பறிப்பு
செல்போன், பாஸ்போர்ட்டை அந்த குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டனர். அதனால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் சந்தான காளீஸ்வரி தவித்துள்ளார்.

உதயகுமாரன் : என்னை அழிக்கப்பார்க்கிறார்கள்


என்னை அழிக்கப் பார்க்கிறார்கள்: சுப.உதயகுமாரன்கூடங்குளத்தில் அமைந்துள்ள 2 அணு உலைகளிலும் முழுவதுமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் அணு சக்தியை எதிர்ப்பதால் தன்னை ஆரியத்துவ சக்திகள் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் 1வது அலகு அணு உலை மற்றும் 2வது அலகு அணு உலை அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், முதலாவது அலகு அணுஉலை கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மே 20ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மீண்டும் நேற்று ஜூன் 27ஆம் தேதி பழுது ஏற்பட்டு மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை ஜூன் 29ஆம் தேதி கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அலகு அணு உலைகள்அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

சீன புல்லட் ரயில் : மணிக்கு 400 கி.மீ வேகம்!


சீன புல்லட் ரயில் : மணிக்கு 400 கி.மீ வேகம்!
மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. முழுக்க உள்நாட்டிலேயே இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனத் தலைநகர் பீஜிங் - ஷாங்காய் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. 1,318 கி.மீ தொலைவுள்ள இந்த இரு நகரங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லட் ரயில் 5 மணி 45 நிமிடங்களில் இணைக்கிறது.
'ஃபக்ஸிங்' என்ற பெயரில் இந்த புதிய புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் சி.ஆர்.400ஏ.எஃப். என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகம் வரை செல்லும். சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

குட்கா லஞ்சம் .. அமைச்சர் அதிகாரிகள் சிக்கினர் ... டைரியில் ஆதாரம்

மின்னம்பலம் : குட்கா போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று பேச
அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 9 நாட்களாகக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகை காரணமாக 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று ஜூன் 28ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் , கேள்வி நேரத்தின்போது, கூடலூர் கிழமை நீதிமன்றத்தைத் தரம் உயர்த்தப்படுமா என்று எம்.எல்.ஏ. திராவிட மணி கேள்வி கேட்கையில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூடலூர் நீதிமன்றத்தின் தரம் உயர்த்தப்படுவது குறித்து உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றார்.

தமிழ் செம்மொழியாவதை எதிர்த்த ராம்நாத்துக்கு அதிமுகவின் 50 எம்பிகளும் 134 எல்எல்ஏக்களும் ஆதரவு .

Venkat Ramanujam தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெரும் வேளையில் அதனை
எதிர்த்த ராம் நாத் கோவிந்து தான் பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளர் இவரை தான் அதிமுகவின் 50 எம்பிகளும் 134 எல்எல்ஏக்களும் ஆதரிக்க போகிறார்களா .
Shankar A · நக்கீரனின் இந்த அட்டைப்படத்துக்கு எதிராக நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர ஆணையாளரிடம் பிஜேபி சட்டப்பிரிவு தலைவர் புகார். இந்த அட்டைப் படத்துக்கு என்ன ? நல்லாத்தானே இருக்கு ?
Ram Nath Kovind had opposed SC status for Dalit Christians, Muslims He argued that Christians and Muslims had been getting reservations in government jobs under the backward class categories, so the demand to put them under the SC category was just to make them eligible for contesting elections in reserved seats.

செய்யது பீடி குழுமம்... 40 இண்டங்களில் ஐ.டி., ரெய்டு

சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40
இடங்களில் ஐ.டி., ரெய்டு நடந்து வருகிறது.நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 40 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முறையாக வரி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர் dinamalar.  மாமூல் எல்லாம் ஒழுங்கா கொடுத்தாளோன்னா?

வீரமணி அதிமுகவுக்கு கோரிக்கை : நீட் தேர்வில் விலக்கு அளித்தால் மட்டுமே குடியரசு தேர்தலில் வாக்கு ..

மின்னம்பலம் : தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளித்தால் மட்டுமே குடியரசுத்
தலைவர் தேர்தலில் வாக்களிப்போம் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்த வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் நேற்று ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்: “தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உட்பட அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, அதிமுக சார்பில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நிறைவேற்றினால் மட்டுமே, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போம் என்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு யானை போன்றது.ஆனால் அதன் பலம் அதற்கு தெரிவதில்லை

A Somasundaran தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..
தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும், மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு...!
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!
ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம்.
இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.
1960 -ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

நீட் தேர்வு ... கல்விகொலை .. நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !

சிவசங்கர் எஸ்.எஸ்: நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஏகடியம் செய்தார்கள். ஏனைய இந்தியா ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகத்திற்கு மாத்திரம். இன்று நீட் தேர்வு முடிவுகள் அதற்கு பதில் சொல்லி விட்டது. முதல் 25 இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை என்று செய்திகள் வருகின்றன.
+2 தேர்வில், 1150 மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட்டில் வெற்றி பெறவில்லை, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 40 % பேரே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நேற்றில் இருந்தே தமிழகம் அலையடிக்கிறது.
நீட் தேர்வு எழுதியவர்களில் 2% பேர் தான் மத்தியப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், மீதமுள்ளவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதற்காகவாவது, இந்த ஆண்டு மட்டுமாவது நீட் வேண்டாம் என ஒரு சாரார் குரல் கொடுத்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தி, தமிழக அரசே புதிதாக ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85%, மத்தியப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15% என இடத்தை பாகம் பிரித்திருக்கிறது.
இது சரி. மாநிலப் பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் பெற போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது.

குட்கா ஊழல் Flaschback ... போலீஸ் கமிஷனர் ஜோர்ஜ் சேட்டன் ஜெயா தலைமையில் மாமூல் ராஜ்ஜியம்

savukkuonline.com/12149/உன்மத்தர்களும், ஊழல்
26_12_2016_001_084பெருச்சாளிகளும், ஊரை அடித்து உலையில் போடுபவர்களும் உத்தமர்களாக காட்சியளிக்கும் காலம் இது.   ஒரு கொள்ளைக்காரி அரியணை ஏறும் காலம் இது.   ஒரு கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நல்லவர்களும், நியாயமானவர்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் காலம் இது.
ஊழல் பெருச்சாளியான ஒரு அரசு தலைமைச் செயலர், வருமான வரிச் சோதனை நடந்த பிறகு, பேட்டியளிக்கையில், ஜெயலலிதா இருந்தால் என்னுடைய அறையில் வருமான வரி சோதனை நடந்திருக்குமா என்று வெளிப்படையாக பேட்டியளித்து விட்டு, பணி இடைநீக்கம் கூட செய்யப்படாமல் ஆனந்தமாக சுற்றும் காலகட்டம் இது.    “பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணந்திண்ணும்” என்று சொன்னான் பாரதியார்.   சாத்திரங்கள் பிணங்களை தின்று கொண்டிருக்கும் காலகட்டம் இது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் அக்கிரமங்களை மனம் பொறுத்துக் கொள்ளாது குமுறும்.  ஆலாய்ப் பறக்கும்.  அங்கலாய்க்கும்.  அப்படி ஒரு அங்கலாய்ப்பை பகிர்ந்து கொள்ளும் கட்டுரைதான் இது.

ஸ்டாலின் : போதைப் பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்க

போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய
காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், " “இந்து” ஆங்கில பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள "குட்கா ஊழல்" பற்றிய விவரங்கள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் குறித்தும் வெளிவந்துள்ள ஆதாரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி, ஊழல் முறைகேடுகள் மற்றும் லஞ்ச லாவண்யங்களின் சொர்க்கபுரியாக இருக்கிறது என்பது, வருமான வரித்துறை ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள் மூலம் "தினம் ஒரு தகவல்" போல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஏர் ஏசியா விமானம் பயங்கரமாக குலுங்கிய விடியோ காட்சி


பறந்து கொண்டிருந்த ஏர்ஏசியா எக்ஸ் பயணியர் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட பிறகு, “சலவை எந்திரம்” குலுங்குவதுபோல பறந்ததை பயணி ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பெர்த்தில் இருந்து மலேசியாவுக்கு கிளம்பிய விமானம் டி7237, மீண்டும் பெர்த்துக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விமானம் தண்ணீரில் தரையிறக்கப்படும் சாத்தியக்கூறு நிலவியதால் , பெர்த்தின் வடக்கில் அவசர சேவைகள் தயாராக நிறுத்தப்பட்டதாக நதி மற்றும் நீர்நிலை படையினர் தெரிவித்திருக்கிறார்கள். ஏர்எசியா எக்ஸ் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இந்த விமானம் “திடீர் எந்திர கோளாறு” ஏற்பட்டதாக பல பயணியர் ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். bbc

செவ்வாய், 27 ஜூன், 2017

BBC : கூகுள் நிறுவனத்துக்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம் .. ஐரோப்பிய ஆணையம் அறிவிப்பு

கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது. சந்தையின் நிலையைச் சிதைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆணையம் ஒரு நிறுவனத்திற்கு, இது நாள் வரை விதித்த அபராதத் தொகையில் இதுவே அதிகமானதாகும்.
தொழிற்போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இன்னும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று அந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

ரயிலில் ஜுனைத் கொலையாளி போதையில் இல்லை.. துக்கத்தினால் ஈத் கொண்டாடத கிராமம்

Lulu Moses கொல்லப்பட்ட ஜுனைதின் சகோதரன் ஷகீல் கூறியதாவது: "என்
சகோதரனை கொலை செய்தவர்கள் குடி போதையில் இருக்கவில்லை. இது வக்கீல்கள் புனையும் அப்பட்டமான பொய்! இதையே மீடியாக்களும் பரப்புகின்றன!" முகம்மது அசாருதீன் என்னும் கல்லூரி மாணவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்: "வெறும் ஒரு கொலையாக மட்டுமே இதை ஹைலைட் செய்யும் மீடியாக்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே மனிதர்கள் தினமும் கொல்லப்படுவது ஒரு பதிவாகிவிட்டது என்பதை ஏன் எடுத்து சொல்ல மறுக்கிறார்கள்? 2015ல் உத்தர பிரதேசத்தில் தன் வீட்டு ஃப்ரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியால் கொல்லப்பட்ட முகம்மது அக்லக், ராஜஸ்தானில் கொல்லப்பட்ட கால் நடை வியாபாரி பெஹ்லு கான், ஜார்கண்டில் கொல்லப்பட்ட நபர், மத்திய பிரதேசத்தின் இமாம், இப்போது ஜுனைது - இவர்கள் அனைவருமே மாட்டிறைச்சிக்காக கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் என்பதை ஏன் மீடியாக்கள் இணைத்துப் பார்க்கவில்லை? மோடியின் ட்விட்டர் பதிவுகளிலோ வானொலி பேச்சுக்களிலோ ஏன் எங்கள் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்படுவதில்லை?

தெலுங்கில் 4 கோடி கேட்கும் நயன்தாரா

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக
நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் 3-வது படம். இதில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதுபற்றி கவலைப்படாமல் இதில் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.மாலைமலர்