ஞாயிறு, 27 டிசம்பர், 2020

சென்னை வந்தார் நடிகர் ரஜினிகாந்த் - ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

thanthitv.:அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி கடந்த 13-ம் தேதி ஹைதராபாத் சென்றார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், படபிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ரஜினி உள்ளிட்டோர் தனிமைப்படுத்திக் கொண்டனர். ரஜினிக்கு சோதனையில் கொரோனா இல்லை என்றாலும், அவர், ரத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்பலோ மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலம் தேறியதால், அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், ஒருவாரத்திற்கு ரஜினி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை: