செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஆர் .வெங்கடராமனும் காஞ்சி சங்கரரும் எம்ஜியாரை மிரட்டி உருவாக்கிய அதிமுக

 ஒரு சங்கர மடத்து  டைரி குறிப்பு   : உலகம் சுற்றும் வாலிபன் . எம்ஜியாரின் சொந்தபடம். பெரும் பொருட் செலவு. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பதிவு. பணம் தண்ணீர் மாதிரி செலவழிக்கிறார் எம்ஜியார். ஒரு சின்ன சாம்பிள் அதில், ஜப்பானில் நடைபெறும் ஒரு கண்காட்சியை அடிப்படையாக கொண்டே கதை நரும். 

அதனால் அதனை ஒட்டியே பல காட்சிகள் எடுக்க வேண்டிய சூழல். ஆகையால் படக்குழு முதலிலே சென்றுவிடுகிறது. பின்னர் எம்ஜியார் அங்கிருந்து இங்கே உள்ள எம்எஸ்வியிடம் பாடல்கள் கேட்கிறார்கள். ஐந்து டியூன்கள் இங்கிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஜப்பான் செல்லும். அதனை கேட்டு எம்ஜியார் கரெக்‌ஷன் செய்வார். ஒன்றை தேர்வு செய்வார். அது மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஜப்பான் செல்லும். இப்படியே படத்தின் எல்லா பாடல்களும் சென்றன. இதில் சென்றன என்பதில், அப்போது ஈமெயிலோ, வாட்சப்போ கிடையாது. எல்லாமே விமான மார்க்கமாக பயணமாகும். யாரோ ஒருவர் எடுத்து செல்வார்கள். இதனை எம்எஸ்வி அவர்களே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். படத்திற்கு காரைக்குடி செல்வந்தர் ஒருவர், மும்மைசேட் ஒருவர், பல விநியோகஸ்தர்கள் செலவை முன்பணமாக தந்தார்கள்.

இதற்கு சில காலம் முன்னர் எம்ஜியார் தனக்கு ஏதேனும் பதவி கிடைக்குமா என திமுக அரசிடம் கேட்கிறார். முதலில் கலைஞர் அவர்கள், சினிமாவில் நடித்துக்கொண்டே அமைச்சராக முடியாது. ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்கிறார். எம்ஜியார் யோசிக்கிறார். தனித்த அதிகாரமுள்ள பதவி ஏதாவது ஒகேவா என கலைஞர் சார்பாக பேசுகிறாரக்ள். எம்ஜியார் சரி என்கிறார். நிற்க. கலைஞரா, நெடுஞ்செழியனா என அந்த போது எம்ஜியார் கலைஞர் பக்கம் நிற்கிறார். அதற்கு காரணம் நன்றிக்கடன். எம்ஜியார் என்ற கலைஞனுக்கு கலைஞர் செய்த உதவிக்காக இதனை அவர் செய்கிறார். எம்ஜியாரை கதாநாயகனாக போட சொல்லி அப்போது பெரும் எழுத்தாளரான கலைஞர் பல படங்களில் சிபாரிசு செய்திருக்கிறார். ( இதனை எம்ஜியார் பேசும் படம் என்ற நாளிதழ்க்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ). இதனால் எம்ஜியார் இப்போது தனித்த அதிகாரத்துடன் கூடிய பதவி என கலைஞர் சொன்ன போது சம்மதம் தெரிவிக்கிறார். உலகம் சுற்றும் வாலிபன் முடிந்த பிறகு இது பற்றி பேசிக்கொள்வோம் என சொல்லிவிட்டு செல்கிறார்.
திமுக என்ற கழகத்தை உடைக்க காத்திருந்தது இந்திய இந்திரா அரசு. ஏற்கனவே பஞ்சாபில் அது ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தது. எம்ஜியார் ஜப்பானில் இருக்கும் போது அவரது வீடு, தோட்டம், அவருக்கு உதவிய பைனான்சியர்கள் வீடு என வருமான வரித்துறை, அமலாக்க துறை புகுந்தது. எம்ஜியார் திணறினார். கலைஞர் டெல்லியில் பேசினார். சட்டம் தன் கடமையை செய்கிறது என்றார் இந்திரா. கலைஞர் புரிந்துகொண்டார். இது டெல்லி ஆடும் ஆட்டமென. இந்த திட்டம் வகுக்கப்பட்ட இடம் ஒரு மடம். (காஞ்சி சங்கரமடம்) இதன் சூத்திரதாரி  (ஆர். வெங்கடராமன் ) பின்னால் குடியரசு தலைவராகவே இருந்தார். விளைவு எம்ஜியார் சுத்திவளைக்கப்பட்டார். பெருந்திட்டம் வகுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கட்சியின் பொருளாளரான அவர் மற்றவர்களிடம் கணக்கு கேட்டார். மாநாட்டு வசூல் பற்றி கேட்டார். எல்லாமே மாநாட்டிலே கொடுக்கப்பட்டன என குரல் ஊடகங்களில் வரவே இல்லை. ஊடகங்கள் எல்லாமே எம்ஜியாரை கொண்டாடின. கட்சி உடைப்பட்டது. அதிமுக உதயமானது. எம்ஜியார் தான் மரணம் அடையும் வரை இந்திராவை எதிர்க்கவே இல்லை.
எமர்ஜென்சி ஆதரித்த இரண்டு பெரும் இயக்கங்கள். ஒன்று கட்சிசார ஆர் எஸ் எஸ். இன்னொன்று அதிமுக. இப்போது எடப்பாடி டெல்லி சென்று காத்திருந்து மோடியை அல்லது மத்திய அமைச்சரை சந்திப்பது போல எம்ஜியார் இந்திராவை சந்தித்து எமர்ஜென்சிக்கு ஆதரவு தெரிவித்தார். தன் மரணவரும்வரை அவர் மத்தியரசின் எந்த கொள்கையையும் எதிர்க்கவில்லை. அப்போதுதான் தனியார் ஆங்கில கல்வி நுழைந்தது. அரசே தமிழ்ப்பள்ளிகள் போல ஆங்கிலப் பள்ளிகளையும் நடத்தட்டும் என கருணாநிதிஉள்ளிட்ட பலரின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த எம்ஜியார் ஆட்சியில் தமிழகத்தில் ஜிடிபி எனப்படும் தொழில் வளர்ச்சி பீகாரைவிட கீழாக இருந்தது. ஆனால் எம்ஜியார் தன் அரசியல் எதிரிகளை தன் பக்கம் இழுக்கவும், தன்னுடன் நடித்தா சில பெண்களை வேவு பார்க்கவும் மட்டுமே பணி செய்து கொண்டிருந்தார். ஜெயலலிதா உத்தரவுகளை செய்கிறார்கள், கட்சி கூட்டங்களில் கேள்வி கேட்கிறார்கள் என சில அமைச்சர்களை அவர் சந்தேகித்தார். அவர்களை ஊழல் குற்றம் சாட்டி விலக்கினார். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதியவே இல்லை. காரணம் டெல்லி பயம். ஆட்சியை கலைத்துவிடுவார்களே என. அவர் கடைசி சில காலம் மருத்துவமனையில் இருந்தாலும் இங்கே மத்தியரசின் உத்தரவுப்படியே உத்தரவுகள் வந்துகொண்டே இருந்தன. இன்று இருக்கும் இடைநிலை சாதிகளின் பெரும் கல்வி நிறுவனங்கள், பார்ப்பனீய பெரு நிறுவனங்கள் எல்லாமே அப்படி அமைந்தவைதான்.
இன்று எம்ஜியார் ஆட்சி, ஏம்ஜியார் அரசியல் என்பவர்கள் எல்லாம் சினிமாவில் கட்டிப்பிடி வைத்தியம் என சொல்லி நடித்தது போல நிஜத்திலும் நடித்துகொண்டு இருப்பவர்கள் தான். எம்ஜியாரே யாரோ சிலரின் ஏவலாக வாழ்ந்தார் கடைசி வரை. இந்த புதிய அரசியல் ஏவல்கள் அந்த ஏவலை தன் வழிகாட்டியாக காட்டுகின்றன. காலம் எவ்வளவு விசித்திரமானது. மகான் கவுண்டமணியின் ஒரு வசனம் நியாபகம் வருகிறது, “ பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனேவா “ ?
 
இந்த சங்கரமடத்து ஜெயேந்திர சுவாமியும்  ஆர் வெங்கடராமன் குடும்பமும் கொண்ட கூடா நட்பு கடைசியில் வெங்கட்ராமின் மகளோடு காஞ்சி சங்கரனும் ஓடிப்போகும் அளவுக்கு வந்தது .  
திடீரென்று காஞ்சி சங்கரனையும் வெங்கடராமன் மக்களையும் காணவில்லை . தன் மகளை தேடி கண்டு பிடிக்கும் பற்றிய பணியை சி பி ஐஇடம் ஒப்படைத்திட்டார் குடியரசு தலைவராக இருந்த இதே வெங்கடராமன் .   
 
அந்த மகள் ஆல்வேஸ் கோயிங் ஸ்டெடிதான் .. நோ கல்யாணம் 

இது இன்னொரு எபிசோட் ..  இதன் காரணமாகவே காஞ்சி மகா பெரியவாளு குட்டி விஜயேந்திரனை மடத்தின் மூன்றாவது வாரிசாக நியமித்தார் .  விஜேயேந்திரனும் லேசுபட்டவர் . 
வாரத்துக்கு ஒன்று தேடி அலையும் காமப்பிசாசு .. இதன்மீது கொலைக்கேஸ் வரையும் உண்டு.. . தப்பித்து கொண்டே வருகிறது 

கருத்துகள் இல்லை: