செவ்வாய், 2 ஜூன், 2020

கிழக்கு பிள்ளைகள் ..... வடக்கு பிள்ளைகள் ... ஈழப்போராட்டத்தின் மறுபக்கம்

Reginold Rgi : கிழக்கு தாய்மார்களின் பிள்ளைகள் களத்தில் சண்டையிட்டு மடிய வேண்டும் வடக்கு
தாய்மார்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உல்லாசமாக வாழவேண்டும் என்பது மட்டும் என்ன நியாயம் ?
கருணா செய்த தவறுதான் என்ன சொல்லுங்கள்.
23 வருடம் உங்களுக்காக போராடியது தவறா ?
யாராலும் வெல்ல முடியாத ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றியது தவறா?
அன்று வன்னி நிலம் எங்கும் சூழ்ந்து கொண்ட ஜெயசிக்குறு படைகளை தோற்கடித்து புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காணவைத்தது தவறா? எங்களை மட்டக்களப்பான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் தானே நடத்தீனிர்கள்?
நாங்கள் அன்று உங்களிடம் என்ன கேட்டோம் கிழக்கு போராளிகளின் உரிமைகள் மறுக்கப்படவே எங்கள் உரிமைகளைதானே கேட்டொம்? எங்களோடு நட்பு ரீதியான உடன் படிக்கைக்கு வந்தால் நாங்கள் புலிகளுடன் இணைந்து செயல்படுவோம் இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம் என்றோமே?
அதற்கு புலிகள் என்ன செய்தார்கள்?
அடிமை ஒப்பந்தத்தை மீறியதற்காக கிழக்கை நோக்கி பாரிய படை நகர்வை மேற்கொண்டு சொந்த போராளிகளை அல்லவா அன்று கொலை செய்தீர்கள் !
எதிரியென்று சொல்ல படும் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தெரிந்த உங்களுக்கு ஏன் சொந்த போராளிகளோடு பேச தெரியாமல் போனதேனோ கருணா பிரிவதற்கு நாங்களே கருணாவை கட்டாயப் படுத்தினோம் 6000 போராளிகளின் விருப்பம் பிரிந்து சொல்வதே கருணா மட்டும் பிரிந்த வரவில்லை என்றால் கருணாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டி நிலை உருவாகியிருக்கும்!

கிழக்கு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கிழக்கில் போராடதானே தந்தார்கள் வடக்கு கொலை முனையில் பலியிடவா தந்தார்கள் வடக்குக் கிழக்கு என்று பிரித்துப் பார்க்காத நீங்கள் சொந்தப் போராளிகளைக் கொல்வதற்காக அன்றி எப்போதாவது கிழக்கிற்கு படை நகர்த்தியது உண்டா? 

கிழக்குப் போராளிகள் எப்போதும் உங்களுக்காக சண்டையிட்டு மடிய வேணும் நீங்களெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது மட்டும் என்ன நியாயம் ?
ஒன்றாக உணவருந்தி ஒன்றாகவே படுத்துறங்கிய தமது சகோதர போராளிகளை அல்லவா அன்று கொலை செய்திர்கள் உண்மையை மட்டக்களப்பான் கதைக்கபோனால் அவனை பிரதேச வாதி துரோகி என்று வாயை அடைப்பதால் உண்மை தர்மத்தை நிரந்தரமாக அழித்து விட முடியாது நன்றி...
தவறு இருந்தால் மன்னிக்கவும்...

கருத்துகள் இல்லை: