
இந்த அமைதிப் பேரணியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் வந்திருந்தனர். பல கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் என பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும், பேரணியில் பங்கேற்றார்.பிளாய்டு குறித்தும், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் கேட்டும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த பேரணிக்காக, ஹூஸ்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் பல இடங்களில் இருந்த கற்கள் உள்ளிட்டவற்றை, நகர நிர்வாகம் அகற்றியது.இதற்கிடையே, நாட்டின் பல இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். இதுவரை நடந்துள்ள வன்முறைகளில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 6,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மட்டும், 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல மாகாணங்களில், கடந்த சில நாட்களாக இருந்ததைவிட, போராட்டம் சற்று தணிந்துள்ளது. 'போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்' என, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ராணுவத்தை அனுப்பும் முடிவை, அதிபர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக