வெள்ளி, 5 ஜூன், 2020

கை ரிக்சாவும் கம்யுனிஸ்டுகளும் .. 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆண்ட கம்யுனிஸ்டுகள்

  மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தோழர் ஜோதி பாசு அவர்கள் 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் இந்தியாவில் நெடுநாள் முதலமைச்சராக இருந்தார் .
அவருக்கு பின்பும் அதே கட்சியை சேர்ந்த புத்த தேவ்  பட்டாச்சாரியா பதவி ஏற்றார்
2011  ஆம் ஆண்டு தேர்தலில் மாக்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சியை இழந்தது
1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது.
ஒரு காலத்தில் மும்பையை விட பெருமை வாய்ந்த வர்த்தக நகரமாக கல்கத்தா விளங்கியது .
பின்பு படிப்படியாக அது தனது எல்லா பெருமைகளையும் இழந்து வறுமையின் கோரபிடியில் சிக்கி இன்று மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது.
சுமார் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாக்சிஸ்ட் கம்யுனிஸ்டுகளின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை .
இடத்தில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால்  பெரும்பாலான மாக்சிஸ் கம்யுனிஸ்டு கட்சியனர் தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகி  விட்டனர்.

எங்கெல்லாம் சமுக நீதி முழக்கங்கள் ஒலிக்கிறதோ அங்கெல்லாம்  இந்துத்வாக்களின் தேவையை நிறைவேற்ற கம்யுனிஸ்டுகள் நுழைந்து விடுவார்கள்  மேற்கு வங்கத்தில் இதுதான் நடந்தது
திரிபுராவில் இது மொத்தமாகவே நடந்தது .
இனி கேரளத்திலும் இது நடக்கும் அறிகுறிகள் தெரிகின்றன.
நீதிமன்றமே சபரி மலையில் பெண்கள் நுழைவுக்கு அனுமதி கொடுத்த பின்பும் கேரளா கம்யுனிஸ்டு அரசு  அதை நிறைவேற்ற பம்முவது ஏன்?
உயர்ஜாதி கம்யுனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட ஜாதி மக்கள் மீது கம்யுனிஸ்டு போர்வையில்  சவாரி விடுவதுதான் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் நடப்பது
இன்றும் மேற்கு வங்கத்தில்  மனிதனை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷா இருக்கிறது
ஆனால் 1973 ஆண்டு  ஜூன் 3  தேதியே கலைஞர் அதை ஒழித்தார் . அதன் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி சைக்கிள் ரிக்ஷாவை வழங்கினார் .
இது போல ஏராளமான முற்போக்கு திட்டங்களை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அதுவும் திமுக ஆட்சியில் மட்டுமே நிறைவேற்ற பட்டன.

கருத்துகள் இல்லை: