ஞாயிறு, 31 மே, 2020

சிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சிவப்பு வட்டத்தில் உள்ளே இருப்பவர்தான் காடுவெட்டி குருவின் மகனை மோசமாக வெட்டிய கனல் என்பவர்.
தினகரன் : சென்னை: ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை
திணிப்பை தடுக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி ஒளிபரப்புத் தளங்களில் ஒளிபரப்பாகும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுவதில்லை.  விளையாட்டுகள், வெகுமக்கள் ஊடகங்கள், பொதுவெளிகள், கடைகள் ஆகியவற்றில் மறைமுக விளம்பரங்கள் மூலமாக சிறுவர்கள் மீது புகையிலைப் பொருட்கள் திணிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை: