சனி, 7 செப்டம்பர், 2019

மலக்குழிக்கு ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாத ஒரு நாட்டிற்கு ராக்கெட் தேவை இல்லை!

சுமதி விஜயகுமார் : சந்திராயன் 2 தோல்வியில் எனக்கு பெரிய வருத்தம்
எல்லாம் இல்லை. நாளை உணவிற்கு வழியில்லாமல் செத்து மடியும் உயிர்களுக்கு இடையில், நிலவிற்கு ராக்கெட் விடுவதில் மனிதம் பெருமை கொள்வதில் ஒன்றுமில்லை. மலக்குழியில் மலம் அள்ளுவதற்கு இன்னும் ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாத ஒரு நாட்டிற்கு ராக்கெட் தேவை இல்லை. அப்படி செலுத்தப்படும் ரொக்கெட்டினால் நம்மக்கு எண்ண பயன்? பிறகு இந்த ராக்கெட்டின் தேவை தான் என்ன !
சந்திராயன் 2 நமக்கானது இல்லை. அமேசான் காடு அழிக்க பட்ட பிறகு, எஞ்சி இருக்கும் இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்ட பட்ட பிறகு தாங்கள் வாழ வேறு ஒரு இடத்தை தேடுவதற்கான முயற்சியே இந்த சந்திராயன்கள். அதில் நமக்கு இடம் இருக்காது. பெரு முதலாளிகளுக்கும் அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கும் பண அடிமைகளுக்குமானது.
ஆனாலும் சந்திரியனின் தோல்வியில் பெரு வருத்தம் ஒன்று உண்றேண்டால் அது சிவனின் சறுகளுக்காக மட்டும் தான். 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க தகுதி இல்லை என்று நிராகரிக்க பட்ட அனிதாக்கள் படித்த அதே பாட திட்டத்தில் படித்து வந்தவர் தான், cbse பாட திட்டத்தில் படித்தவர்களை பின்னுக்கு தள்ளி, சந்திராயனை ஏவிய சிவன். இதற்கு முன்பு வெற்றிகரமாக ஏவிய சந்திராயன் 1 கு பின்பு இருந்ததும் அரசு பள்ளியில் படித்த மயிலசாமி அண்ணாதுரை தான்.

நீதி கட்சியும், காமராஜரும் கொண்டு வந்த ஆரம்ப கல்வி திட்டமும் திராவிட கட்சிகள் முன்னெடுத்த உயர் கல்வி திட்டங்களில் முளைத்த விதைகள் இவர்கள். வரிய குடும்பத்தில் பிறந்தும், அரசு இலவச பள்ளி தன் கிராமத்தில் இருந்ததினால் மட்டுமே படிக்கும் வாய்ப்பை பெற்றவர் சிவன். தன் மகன் நன்றாக படிக்கிறான் என்ற காரணத்தினாலும் பக்கத்து கிராமத்தில் உயர்நிலை பள்ளி இருந்த காரணத்தினாலும், தினமும் சைக்கிளில் அப்பா கொண்டு விட்டு கூட்டி வந்ததினால் படித்தவர் சிவன். கல்லூரியில் அதிக கட்டணம் இல்லாததினாலும், நீட் போன்ற தகுதி தேர்வு இல்லத்தினாலும் மட்டுமே இன்று இந்த உயரத்தை தொட்டுள்ளார்.
சிவனின் இந்த சரிவு, அந்த ஒரு காரணத்திற்காகவே வறுத்த பட வேண்டிய ஒன்று. ஆனால் அதற்காகவெல்லாம் சிவன் எந்த விதத்திலும் குறைந்து விட போவதில்லை. சிவனின் இந்த உச்சம், சமூக நீதியின் வெற்றி. லாப நோக்கமற்ற அரசு பள்ளி செயல் திட்டத்தின் வெற்றி. தகுதி தேர்வுகளற்ற அமைப்பு முறைக்கு கிடைத்த வெற்றி.
அரசு கல்வி பாடத்தை மேன்படுத்தி தகுதி தேர்வினை புறக்கணிப்போம். சிவன்களுக்கும், மயிலசாமி அண்ணாதுறைகளுக்கும் கிடைத்த வாய்ப்புகள் அனிதாக்களுக்கும் தொடரட்டும்.
சிவனுக்கு வாழ்த்துகள்