


முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர்
கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா
என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மங்கம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை
வியாதி போன்றவை இல்லாததால், ஐ.வி.எப் முறையில் கருத்தரிக்க வைக்க முடிவு
செய்தனர்.
மங்கம்மாவுக்கு மாத விலக்கு முற்றிலுமான நின்று பல ஆண்டுகள் ஆன நிலையில்,
செயற்கை முறையில் ஒரே மாதத்தில் மாத விலக்கை வர வழைத்துள்ளனர். பின்னர்,
ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர்.
இன்று, மங்கம்மா இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமாக பிரவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக