
Samayam Tamil : ; இந்தியாவின் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஐ.எஸ். பயங்கரவாத தரப்பு தங்களுக்கு சொந்தமான பகுதி என்று முதல் முறையாக அறிவித்துள்ளது. ;ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் உயிாிழந்தாா். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையவா் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து ஐ.எஸ். அமைப்பின் இணையதளமான “Amaq News Agency” அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐ.எஸ். அறிவித்து இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக