செவ்வாய், 7 மே, 2019

ராஜேந்திர பாலாஜி :திமுக இந்தி படிக்கவிடாமல தடுத்ததால்தான் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை

LR Jagadheesan : இதற்குப்பின்னும் அதிமுகவை திராவிட கட்சி என்றும் இது பெரியார் மண் என்றும் ஆர்எஸ்எஸ் இன்னும் தமிழ்நாட்டில்
காலூன்றவில்லை என்றும் பாஜக ஒருநாளும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது என்றும் நம்பும்/பேசும் ஆட்களிடம் அரசியல் விவாதம் செய்ய ஒன்றும் பாக்கி இல்லை.
எவ்வளவோ முயன்றும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத ஆர் எஸ் எஸ் அமைப்பு அதற்காகவே உருவாக்கியது தான் இந்து முன்னணி. ர்கள் மொத்தமாய் கபளீகரம் செய்துவிட்டார்கள். இன்றைய நிலையில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் ஏதாவது ஒரே ஒரு வித்தியாசத்தை யாராலாவது காட்ட முடியுமா?
அதைப்போலவே பாஜக என்கிற பெயரில் இருக்கும் அரசியல் கட்சியால் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெறமுடியாமலிருப்பதால் அதிமுகவையே அவ
ஏற்கனவே சொன்னது தான். எம்ஜிஆர் தன் ரசிகர் மன்றமாக வைத்திருந்த அதிமுகவை ஜெயலலிதா தன் அடிமைகள் கூடாரமாக காயடித்து வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அந்த காயடிக்கப்பட்ட உழவு மாடுகளையும் அடிமாடுகளையும் மொத்தமாய் கைப்பற்றிக்கொண்ட அமித்ஷா அப்படியே அவர்களை தன் அடியாள் படையாக மாற்றிக்கொண்டார்.
மாஃபா முதல் இந்த மடசாம்பிராணி மந்திரி வரை நாக்பூர் காலால் இட்ட கட்டளைகளை தலைமேல் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா திமுக அம்மு திமுகவாகி அமித்ஷா திமுகவானதால் தான் திராவிடர் இயக்கத்தின் உயிர்கொள்கைகளில் ஒன்றின் மீது பகிரங்கமாக ஒண்ணுக்கடித்துவிட்டு எந்த சங்கடமும் இல்லாமல் தமிழ்நாட்டு அமைச்சராகவும் நீடிக்க முடிகிறது

கருத்துகள் இல்லை: