முன்னாள் முதல்வரும், அதிமுக ஸ்தாபகருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக மாலை 4 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய
பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள்
வைக்கப்பட்டுள்ளன.
இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்
போலீஸார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து டிராபிக் ராமசாமி நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் நகலை அரசு தரப்புக்கு கொடுக்க பதிவுத்துறை அறிவுத்தியுள்ளதால், நாளை காலை அரசு தரப்புக்கு கொடுத்தவுடன் காலை 10 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்
போலீஸார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து டிராபிக் ராமசாமி நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதன் நகலை அரசு தரப்புக்கு கொடுக்க பதிவுத்துறை அறிவுத்தியுள்ளதால், நாளை காலை அரசு தரப்புக்கு கொடுத்தவுடன் காலை 10 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக