ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பிச்சைகாரரை அடித்த அதிமுக நிர்வாகி .. தான் போலீஸ் என்று பொய்கூறி தாக்குதல்


Vishnupriya R ONEINDIA TAMIL ON : காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே போலீஸ் என கூறி பேருந்து நிலையத்தில் படுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரரை சரமாரியாக அதிமுக நிர்வாகி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் திருப்போரூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் என்று கூறி பேருந்து நிலையத்துக்குள் வந்து கையில் வைத்திருந்த லத்தியால் உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக தாக்கினா.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தடுத்தும் கேட்காமல் அந்த நபர் பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பிச்சைக்காரரை சாலை ஓரத்தில் இழுத்து போட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். அதன்பின்னர் அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து பிச்சைக்காரரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ பரவிய நிலையில், இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது பிச்சைகாரரை அடித்தவர் காவல்துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் அதிமுக பிரமுகர் குமார் என்பது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை: