
திட்டத்தை முன்வைத்துள்ள மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. புதுடெல்லி, தொலைக்காட்சி பெட்டியின் செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது தொடர்பான திட்டத்தை, நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, புதிய தொலைக்காட்சியின் செட்- டாப் பாக்ஸ் கருவியில் பொருத்துவது தொடர்பான திட்டத்தை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது,
விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில், மத்திய
அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக
விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் அக்கட்சியின் செய்தி
தொடர்பாளர் த ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்களை
வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக