வியாழன், 19 ஏப்ரல், 2018

பஞ்சாப் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை


A 15-year-old girl was brutally murdered after raping . Siva - Oneindia Tamil குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மணிபூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு மாயமானார். தாயில்லாத அந்த சிறுமி வறுமையின் காரணமாக 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். 15-year-old girl raped and killed in Punjab 
 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுமி மாயமானார். இதையடுத்து அவரை அவர் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புதன்கிழமை காலை பயன்படுத்தப்படாத பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறுமி பிணமாக கிடந்ததை சில சிறுவர்கள் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை அவரின் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: