வியாழன், 19 ஏப்ரல், 2018

சுவிஸ் பேருந்து விபத்து 12 இலங்கையர் உட்பட 15 பேர் காயம்

tamilnew:சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில்
இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை உல்லாசப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் மையத்தில் இரண்டு ட்ரக்குடன் மோதியதால் இவ்விபத்து நேர்ந்ததாக சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த வேளை பேருந்தில் 40 உல்லாசப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை பேருந்தில் இருந்த பெண் வழிகாட்டி பலத்த காயத்திற்கு உட்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: