சனி, 17 ஜூன், 2017

திருப்பூருக்கு மோடி வைத்த ஆப்பு..... ஜாப் வொர்க்கிற்கு 18% சேவை வரி

trollmafia2  :  2014 பாராளுமன்றத் தேர்தலின் போது அதிக மோடி பக்தர்கள் வாழ்ந்த இடம் திருப்பூர். திருப்பூரின் பெரும் செல்வந்தர்களில் முக்கால்வாசிப் பேர், மோடி பிரதமரானால் திருப்பூரில் பாலாறும் தேனாறும் ஓடும் < என்று பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார்கள். 10 பேர் கொண்ட குழு வந்து திருப்பூரின் தேவைகளை அறிந்து சென்றதாகவும் சுமார் 1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருப்பூருக்கு மோடி தயாரித்து வைத்திருப்பதாகவும்; புருடா விட்ட கோஷ்டியெல்லாம் உண்டு. அந்த அளவுக்கு மோடி போதையில் இருந்தார்கள். திருப்பூரின் மிக முக்கிய பணி ஜாப் வொர்க்ஸ்.., மூலப் பொருட்களைக் கொடுத்து அதை ரெடிமேட் ஆடைகளாக உருவாக்கித் தரச் சொல்வார்கள்.. நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் இந்த ஜாப் வொர்க்கை செய்து வந்தன. இந்த தொழில் சேவை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது... அதற்கு ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை.. இப்போது மோடிஜி அவர்களின் அரசு ஜாப் வொர்க்கிற்கு 18% சேவை வரி விதிச்சிருக்கு.. 0 to 18%. ஜாப் வொர்க் தொழிலையே முற்றிலும் அழிக்கும் திட்டம் இது... ஆடைகளின் விலை கடுமையாக உயரும். ஏற்றுமதி செய்வதெல்லாம் மிகக் கடினம்.< தேவையா இது? *மோடி பக்தாள்ஸ்!*

கருத்துகள் இல்லை: