டைம் இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடிப்பது உலக அரசியல் தலைவர்களுக்கு கௌரவமான விஷயம். அத்தகைய வாய்ப்பு மோடிக்கு குறுகிய காலத்திலேயே இருமுறை கிடைத்தது. அதே போல் கடந்த ஆண்டு டைம் இதழின் செல்வாக்குமிகுந்த 100 பேர் பட்டியலில் மோடி இடம் பெற்றிருந்தார். அதிகமாக பாப்புலவராகி வரும் தலைவர் என்ற வகையில் மோடிக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்தது. ‘Person of the Year’ வரிசையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 7 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தார். அந்த வகையில் டொனால்ட் ட்ரம்ப்பை டைம் இதழ் அறிவித்த போது, இந்தியர்கள் கொதித்து எழுந்தனர்.
அதேபோல், இந்த ஆண்டும் 100 பேர்கள் பட்டியலில் யார் யார்… இடம் பெறலாம் என டைம் இதழ் ஆன்லைன் வாக்கெடுப்பை நடத்தியது. வாக்கெடுப்பில் யாருமே எதிர்பாரத வகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்தே முதலிடத்தில் வந்துள்ளார். இவருக்கு 5 சதவீத வாக்குகள் கிடைத்தன. கடந்த ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக ரோட்ரிகோ பதவியேற்ற பின் ஒரே அதிரடிதான். ‘போதைப் பொருட்கள் மீதான போர்’ என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இவர் எடுத்த நடவடிக்கையால் இதுவரை 8,000 பேர் வரை கொல்லப்பட்டுள்னர். ஒரே மாதத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை வாய்க்கு வந்தபடி பேசி மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும், இவருக்குத்தான் அமெரிக்கர்கள் உள்ளிட்ட டைம் வாசகர்கள் தேர்வு செய்த பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபரை தொடர்ந்து கனடா பிரதமர் Justin Trudeau, போப் ஃப்ரான்ஸிஸ், மைக்ரோசாப்ட் நிறுவுனர் Bill Gates ஃபேஸ்புக் சிஇஓ Mark Zuckerberg ஆகியோர் தலா 3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். (கடந்த முறை ‘Person of the Year’ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 சதவீத வாக்குகள் கிடைத்தன)
பட்டியலில் இருந்த மோடிக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இத்தனைக்கும் பிரதமராக பொறுப்பேற்ற பின், அமெரிக்காவுக்கு இருமுறை போய் வந்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட ஓட்டளிக்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நாதென்யாகுவுக்கும் ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.ஒரு வாக்கு கூட கிடைக்காத மற்றவர்கள்… மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவங்கா ஆகியோர். vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக