ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சீமான் பார்பனீயத்தின் புதிய அடியாள்? ஆரியத்தின் புதிய நண்பன்?

சீமான் "தமிழ்" என்ற இனிப்பு தடவிய ஆரிய ஆதரவுக் கைக்கூலி?
எப்படி ஆர்எஸ்எஸ்,,, பார்ப்பனியத்தின் மீது திரும்பிய எதிர்ப்பை லாவகமாக இஸ்லாமியர் மீது திருப்பியதோ,,அதே போல பார்ப்பனியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டில்,,,எதிரி பார்ப்பான் அல்ல,,,மாற்று மொழியினர் என்பதும்""
இந்த மண்ணில் பெரியாரின் கொள்கையை ஆர்எஸ்எஸ் என்ற நேரடி முகம் கொண்டு எதிர்க்க முடியாத காவிக் கூட்டம்,,,
தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக,
கொஞ்சம் வண்ணப்பூச்சுகளுடன் " இந்து முன்னணி " என்ற பெயருடன் களம் இறங்கியது,,,
அப்படி வந்த இந்து முன்னணியால்,,
,ஏற்கனவே மதப்பற்றும்,பிற்போக்கு சிந்தனையும் உடையவர்களையே ஈர்க்க முடிந்தது,,,
ஆனால் இந்த சீமான் அதைவிடவும் ஒருபடி மேலே போய்,,பெரியாரிய எதிர்ப்பு என்ற விசத்தை ,,"தமிழ்" என்ற இனிப்பை தடவித் தரும் நாச வேலையை திறன்பட செய்து வருகிறார்,,,

திமுக,அதிமுக போன்ற தேர்தல் கட்சிகள் செய்யும் தவறுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,,,தனது பேச்சு திறமை மூலம் ,,மக்களையே "சரியாகத் தான் பேசுகிறார்" என சிந்திக்க வைத்து,,,அதற்கு சர்வலோக நிவாரணியாக "திராவிடத்தால் தான் இது எல்லாம்" எனக் கூறி,,, 3000 வருடமாக ஆரியத்திற்கும்- தமிழுக்கும் நடக்கும் ஒரு பண்பாட்டு புரட்சிக் கொள்கையை,,,,
தேர்தலால் நடக்கும் தவறுகளுக்கு முடிச்சுப் போட்டு,,,,பார்ப்பனியத்திற்கு சாதகமாக திராவிட எதிர்ப்பை பேசுகிறார்,,,
*மேலும் இந்த மண்ணில் புரட்சிகர கருத்தால் ஈர்க்கபடும் இளைஞர்களுக்கு தேவை இயக்கங்களே ஒழிய*,, தேர்தல் கட்சிகள் அல்ல,,,
*அப்படி வரும் இளைஞர்களை இயக்கங்கள் பக்கம் போக விடாமல்*,,,நாம் தமிழர் என்ற ஓட்டுப் பொறுக்கி அரசியல் கூடாரத்தில் தங்க வைத்து,,,அந்த இளைஞர்களின் சிந்தனைகளை காயடிக்கும் வேலைகளை செவ்வனே செய்து வருகிறார்,,
"""*இயக்கங்கள் மேடையில் பேசுவதை அப்படி காப்பி அடித்து*,,,அதை அரசியல் மேடையில் பேசி,,,,இது தேர்தல் அரசியலால் சாத்தியம் என்ற பின்பத்தை உருவாக்குவதே சீமானின் சூச்சமம்"""
இந்த பேச்சை இயக்க மேடைகளில் கேட்கும் வாய்ப்பு இல்லாத இளைஞர்கள்,சீமானிடம் கேட்பதால் இவர் தான் புரட்சியாளர் என ஏமாறுகிறார்கள்,,,,
3000 வருடங்களாக இந்த மண்ணில் நடக்கும் ஆரிய-தமிழர் போராட்டத்தை,திசை திருப்பி,,,2009 க்கு பிறகு திராவிடர்-தமிழர் போராட்டமாக மாற்றுகிறார்,,,
"பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரும் பார்ப்பனிய எதிர்ப்பு பண்பாட்டுப் போரை மக்கள் மூளையில் இருந்து மறக்கடித்து,,,,
வெறும் மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு,,,"பார்ப்பான் தமிழ் தான் பேசுகிறான்,,ஆக அவன் சுத்தத் தமிழன் தான்" என்று கூறி பண்பாட்டு அரசியலையே தனது பதவி அரிப்புக்கு விற்பனை செய்ய இன்று துணிந்துள்ளார்,,,
வெறும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் மூலம்,,இளைஞர்களின் மூளையை கட்டிப்போட்டு,,,,புரட்சியாளர் போன்ற மாய பின்பத்தை உருவாக்குகிறார்,,,
பெரியாரியத்தையும்,,,,3000 வருடப் பாரம்பரியம் கொண்ட ஆரிய-திராவிடப் போரை உடைக்கும் அரசியலை,,நேரடிக் காவி இயக்கங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை விடவும்,,,
அதே ஆரிய-தமிழர் போராட்டத்தை உடைக்கும் நுணுக்கமான நுன் அரசியலை "தமிழ்" என்ற இனிப்பை தடவி தரும் வேலை செய்யும் சீமான் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தான மிருகம் தான்,,,,
சீமான் "தமிழ்" என்ற இனிப்பு தடவிய ஆரிய ஆதரவுக் கைக்கூலி என்பதற்கு சான்றே,,,,
எப்படி ஆர்எஸ்எஸ்,,, பார்ப்பனியத்தின் மீது திரும்பிய எதிர்ப்பை லாவகமாக இஸ்லாமியர் மீது திருப்பியதோ,,அதே போல பார்ப்பனியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டில்,,,எதிரி பார்ப்பான் அல்ல,,,மாற்று மொழியினர் என்பதும்""
உருது பேசும் இஸ்லாமியர்களை வந்தேறி என்பதும்,,,,
பார்ப்பானை மண்ணில் மக்கள் என்பதும்,,,,
ஆக சீமானின் இந்த மறைமுக பார்ப்பனிய ஆதரவு கருத்தை வேரோடு தகர்க்க வேண்டிய கடமை மனிதத்தை நேசிக்கும் அனைவரும் செய்ய வேண்டிய வேலை,,,,
காலம் கடந்து கவலைப்பட்டால் எந்தப் பயனும் இல்லை,,,  முகநூல் பதிவு தாமோதரன்

கருத்துகள் இல்லை: