திங்கள், 17 ஏப்ரல், 2017

மத்திய அமைச்சர்களுக்கு இந்தி கட்டாயம்! இந்தியா இனி இந்திக்கு மட்டும்தான்?

தேசிய அலுவல் மொழிகளுக்கான பாராளுமன்றக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி “இந்தி எழுதப் படிக்கத் தெரிந்த மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்” ஆகியோர் இனிமேல் இந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தி மொழியை பிரபலபடுத்துவது தொடர்பாக , பாராளுமன்றக் குழுவினர் அளித்த 117 பரிந்துரைகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிக்கை அனைத்து அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் மத்திய அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புதிதாக பதவியேற்க உள்ள குடியரசுத் தலைவர் இனிமேல் இந்தியில் மட்டுமே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.thetimestamil இதர மொழி பேசும்  மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?   

கருத்துகள் இல்லை: