புதன், 19 ஏப்ரல், 2017

ஆஸ்திரேலியா ‘457 விசா’திட்டத்தை ரத்து செய்தது!... சுமார் 24 ஆயிரம் இந்தியர்களின் விசா காலி ?

இந்தியாவை பாதிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் அடுத்து ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, தனது நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காரணமாக  திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்றது. அந்நாட்டு அரசு வெளிநாட்டு பணியாளர்கள் 4 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் ‘457 விசா திட்டம்’ என்ற பெயரில் விசாக்கள் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் இந்த ‘457 விசா’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த 95 ஆயிரத்து 758 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 24.6 சதவீதம்பேர் இந்தியர்கள்தான்.
எந்த நேரம் நம்ம ஆளு அவுஸ்திரேலிய பிரதமரோடு  மாலை மாத்தினாரோ?..  பாக்கிரச்சே ஒரு மாதிரியா இருக்கு.  

அடுத்த இடங்களை இங்கிலாந்தும், சீனாவும் பெறுகிறது. இந்த விசாக்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சென்று ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறை, மருத்துவத்துறை, விருந்து உபசரிப்பு (ஓட்டல்) துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா’ திட்டத்தை திடீரென ரத்து செய்து ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ஆஸ்திரேலிய வேலை வாய்ப்புகளில் ஆஸ்திரேலியர்களுக்கு முன்னுரிமை தந்தாக வேண்டி உள்ளது. எனவே நாங்கள் ‘457 விசா’ திட்டத்தை ரத்து செய்கிறோம். இனி இந்த விசாக்களை வழங்க மாட்டோம். ஆஸ்திரேலியா வேலை வாய்ப்புகள் ஆஸ்திரேலியர்களுக்கே வழங்கப்படும் என கூறிஉள்ளார். மேலும், பதிலாக புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய தற்காலிக விசா திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறிஉள்ளார் பிரதமர் மால்கம் டர்ன்புல். மால்கம் டர்ன்புல் இந்தியா வந்துவிட்டு ஆஸ்திரேலியா சென்ற நிலையில் இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா ‘457 விசா’  நகர்வின் விளைவுகளை இந்தியா ஆய்வு செய்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. “மத்திய அரசு ஆஸ்திரேலிய அரசின் விசா நடைமுறையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது, அனைத்து தரப்பிடமும் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்று உள்ளதா என்பதை நாம் பார்க்கவேண்டும் என்பதும் ஒரு விஷயமாகும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறிஉள்ளார்.

கருத்துகள் இல்லை: