வியாழன், 1 செப்டம்பர், 2016

பாரிவேந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாரிவேந்தரின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கடந்த 29.08.2016 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: