
இந்நிலையில், தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம், அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுச்சா சிங், பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாது; இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கின. அந்த ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் காண்பித்து, சுச்சா சிங்கை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, ஆம் ஆத்மியின் பஞ்சாப் எம்.பி., பகவந்த் மான் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர். இதுபற்றி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சுச்சா சிங்கை பதவியிலிருந்து நீக்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுச்சா சிங், ‘அரவிந்த் கெஜ்ரிவால், சீக்கியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். மின்னம்பலம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக