
2. கலைஞர் அருந்ததியருக்கு 3 % உள் ஒதுக்கீடு தந்தார்...அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயில பெரும் தொகையை கொடை அளித்தார்... அதன் விளைவாக சில ஆயிரம் பேர்கள் படித்து பட்டம் பெற்று அரசுப்பணிகளை பெற்றார்கள்... அனால்... எல்லா சாதிகளும் எங்களை சரி சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடும் விசிக ..திருமா ... அருந்ததியினரை தனக்கு சமமாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்..போராட்டங்கள் நடந்தன......அன்றே அவர் கலைஞருக்கு எதிராக மாறிவிட்டார்.... சரி போகட்டும்.... கலைஞரால் பயனடைந்த அருந்ததி இன மக்கள்...தேர்தலில் தினுகவினருக்கு ஆதரவு அளித்தார்களா ??? இல்லையே !..அதன் தலைவகள் திமுக எதிர்த்து போட்டி இட்டார்களே.. இது பச்சைத் துரோகம் இல்லையா ? நினைக்க...நெஞ்சம் பதறவில்லையா ?
3. ஆந்திராவைப்போல இங்கேயும் கிருஸ்துவர்கள் இட ஒதுக்கீடு கேட்டார்கள் ....உடனே கொடுத்தார் கலைஞர்.. அதே கிருஸ்துவர்கள் இட ஒதுக்கீட்டால் எங்களுக்கு பாதிப்பு தான்..கலைஞர் எங்களுக்கு தீங்கு செய்து விட்டார் என்று.. தூற்றினார்கள்.. பிறகு அதையும் அவர்கள் விருப்படி சரி செத்தார்.. என்ன உலகமடா இது ? எதையும் செய்யாத ஜெயாவுக்கு புகழ்மாலை.. சிரிப்புதான் வருது.
4 .
இப்போதும்...
தலித் கிருஸ்துவர்களை தலித் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும்....
மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் இன்றும் ..
கலைஞர் குரல் கொடுத்துள்ளார்..
இதன் விளைவாக யார் யார் கலைஞரை தூற்றுவார்களோ ...எதிர்ப்பார்களோ போக போகத்தான் தெரிய வரும்..
இவர்ளைப் பற்றி யாரும் நினைக்காதபோது...கலைஞர் மட்டும் அவர்கள் நலனில் அக்கறை காட்டு கிறார்...
ஆனால் பயனாளிகள்...கலைஞருக்கு வேதனையை மட்டுமே பரிசாக தருகிறார்கள்.
கலைஞர் எல்லோருக்கும் நன்மைகள் செய்தும் அவர்கள் நிந்தனைக்கு ஆளாகிறார்.
தமிழ் மக்கள் இயல்பே இது தானோ ??
Damodaran Chennai முகநூல் கலைஞர் எல்லோருக்கும் நன்மைகள் செய்தும் அவர்கள் நிந்தனைக்கு ஆளாகிறார்.
தமிழ் மக்கள் இயல்பே இது தானோ ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக