
இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு மற்றும் அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
திருமாவளவனின் கோரிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்து விட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ராஜேஷ் லக்கானி, "வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தி மற்றும் ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் மூலமே மட்டுமே தீர்வுகாண முடியும்" என்று கூறியுள்ளார்.
Read more at: ://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக