வியாழன், 22 மே, 2014

பாஜகவை எதிர்த்து போராடுவோம்: சோனியாவை சந்தித்த பின் லாலு பேட்டி

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ்  சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜனதாவின் வெற்றி என்பது ஒரு புயல் மாதிரி. அது நீண்ட நாள் நீடிக்காது. பா.ஜனதாவை முழுமூச்சுடன் எதிர்த்து போராடுவோம். பீகாரில், பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்குத்தான் புதிய ஐக்கிய ஜனதாதள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தோம். இருப்பினும், அரசை கண்காணித்து வருவோம். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: