ஞாயிறு, 18 மே, 2014

ஸ்டாலின் அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா.! தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கலைஞரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்



பாராளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
தி.மு.க. வேட்பாளர் தேர்வில் அவர் தலையிட்டதாகவும் கூட்டணி முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் அதனால் தி.மு.க. தோல்வியை தழுவியதாகவும் புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தோல்விக்கு பொறுப்பு ஏற்று அனைத்து பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொருளாளராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். தேர்தல் பணிக்குழுவில் முக்கிய இடம் வகித்தார் maalaimalar.com/ .மிகவும் வரவேற்கதக்க ஒரு நடவடிக்கை  , கட்சியை பலப்படுத்த அழகிரியுடனும் இதர குஷ்பூ போன்றவர்களிடமும் சமரசமாக வேண்டும் 
  

கருத்துகள் இல்லை: