ஞாயிறு, 18 மே, 2014

மாயன் காலண்டரின் அர்த்தம் நாம் புரிந்துகொள்ளமுடியாத தாத்பரியம் அதற்குள் மறைந்திருக்கிறதோ?

mayat4பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 36
நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.
இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எண் முறையின் பெயர் தசாம்ச முறை (Decimal System). தசம் என்றால் பத்து. அதாவது, இந்தக் கணித முறை தச அடிப்படையைக் கொண்டது. அது என்ன தச அடிப்படை?
உதாரணமாக 2875 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இடமிருந்து வலமாக எண்களைப் பாருங்கள்.

முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.
இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 10 = 70.
மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 102  = 8 x 100 = 800
நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 103  = 2 x 1000 = 2000
இந்த அடிப்படையில், எண்ணின் மொத்த மதிப்பு, இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஐந்து.
இந்த எண்முறை நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்குக் கலாசாரம் மாறுபடும்.   தமிழ்  எண் முறையில், இந்த எண்களை எப்படி எழுதுவார்கள்?
Evolution-of-number-system
தமிழ் எண் முறையில் 0 கிடையாது.
மாயர்களும் கணித அறிவில் மாபெரும் முன்னேற்றம் கண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எண்முறை வித்தியாசமானது. இந்து அரபிய எண்களில், தசாம்ச முறையில், 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்ற பத்து குறியீடுகள் உள்ளன.
மாயர்களின் எண்முறையிலும் பத்து எண்கள் உள்ளன. தமிழ் போலவே தனிப்பட்ட எண் முறையும் உண்டு. மேலே பார்த்ததுபோல், தமிழில் 9 குறியீடுகள் உள்ளன. ஆனால், மாயர்களுக்கு மூன்று குறியீடுகள்தாம். அவை :
015
இந்தக் குறியீடுகளை அடிப்படையாக வைத்து மாயர்கள் எண்களை எப்படி எழுதினார்கள்?
இப்படித்தான்.
Maya_numbers_0-20
எப்படி கூட்டல் கணக்குப் போட்டார்கள்?
.  + .. = …
. . +  ———- = ..    —————
மாயர்களின் எண் முறை தசாம்ச முறை அல்ல. அது Vigesimal System என்று அழைக்கப்படுகிறது. அது என்ன புது முறை?
உதாரணமாக மாயர்களின் கீழ்க்கண்ட எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்; .
..               ..  .            ..     
_____     _______
முன் போல் வலமிருந்து இடமாக எண்ணுவோம்.
முதல் இடத்தில் 5. இதன் மதிப்பு 5.
இரண்டாம் இடத்தில் 7. இதன் மதிப்பு 7 x 20 = 140.
மூன்றாம் இடத்தில் 8. இதன் மதிப்பு 8 x 202  = 8 x 400 = 3200
நான்காம் இடத்தில் 2. இதன் மதிப்பு 2 x 203  = 2 x 8000 = 16000
எண்ணின் மொத்த மதிப்பு, 16000 + 3200 + 140 + 5 = 19345
மாயர்களின் எண் முறையில் கூட்டல், கழித்தல் செய்யலாம். பெருக்கல், வகுத்தல் செய்ய முடியுமா, செய்தார்களா? நமக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மாயர்களின் இந்த எண்முறை ஏன் உலக அளவில் வெற்றி காணவில்லை?
எல்லா நாடுகளும் தசாம்ச முறையைப் பின்பற்றுவதற்கு என்ன காரணம்?
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ஒரு காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது. நம் கைகளில் பத்து விரல்கள் இருக்கின்றன. நாம் சின்னக் குழந்தைகளாக இருக்கும்போது, அப்பா அம்மாவும், ஆசிரியர்களும், எப்படிக் கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்?
இரண்டும் மூன்றும் கூட்டினால் விடை என்ன? இதை நாம் எப்படிச் சிறுவயதில் கற்றுக்கொண்டோம்? கை விரல்களைக் கொண்டுதான் அல்லவா?
தசாம்ச முறையை உலகம் ஏற்றது சரி. அது மாயர்கள் முறையைவிட எளிதானதாகவும் இருக்கலாம். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,  விஜெஸிமல் முறை கண்டுபிடித்த மாயர்களின் கணிதத் திறமையை, அறிவுக் கூர்மையை, இந்தக் காரணங்கள் கொஞ்சம்கூடக் குறைத்துவிட முடியாது.
காரணம்? இந்தக் கணிதத் திறமையை அடிப்படையாக வைத்து அவர்கள் வானியல் ஆராய்ச்சிகள் நடத்தினார்கள், நாள்காட்டிகள் உருவாக்கினார்கள். மனித சமுதாய முன்னேற்றத்தில் மாபெரும் சாதனைகள் அல்லவா இவை?
வானியல் சாதனைகள்  
நாம் வாழும் உலகம் தனியான அமைப்பு அல்ல, மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி என்பது மாயர்களின் நம்பிக்கை. அவர்களுடைய இதிகாசக் கதைகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.
உலகத்தை முமு முதற் கடவுள் படைத்தார். அந்த உலகத்துக்கு மூன்று பகுதிகள். பூமி. அதற்கு மேல் 13 வகை உலகங்கள் கொண்ட சொர்க்கம். வானத்தின் நான்கு ஓரங்களிலும் நான்கு கடவுள்கள் வானத்தைப் பத்திரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பூமிக்குக்  கீழே 9 வகை உலகங்கள் கொண்ட பாதாள உலகம். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று வகை உலகங்களுக்கும் தனித்தனி ராஜாக்கள்.
தான் படைத்த உலகம் என்றும் செழிப்பாக இருப்பதற்காகக் கடவுள் உலக மரம் (World Tree) நட்டார்.  இதன் கிளைகள் சொர்க்கத்தில் உள்ளன. வேர்கள் பாதாளத்தில். இந்த மரம்தான் மூன்று உலகங்களையும் தாங்கிப் பிடிக்கிறது என்பது மாயர்களின் நம்பிக்கை.
இங்கே உலக மரம் என்று குறிப்பிடப்படுவது விஞ்ஞானம் விளக்கும் பால்வழி விண்கூட்டம்தான் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பால்வழி விண்கூட்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.
ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்?  விடை தெரியாத ஆச்சரியம் இது!
ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில்  வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.
orion
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.
ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!
உலகத்தை படைத்த முழு முதற் கடவுளான கேட்ஸால்கோயோட்டெல் நினைவாகக் கட்டப்பட்ட பிரமிட் சீசென் யீட்ஸா (Chichen Itza ) என்ற நகரத்தில் இருக்கிறது. இந்த பிரமிட் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இந்தப் பிரமிடின் நிழல் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவமாக, ஆமாம், கேட்ஸால்கோயாட்டெல் வடிவமாக விழுகிறது. பிரமிட் படிகளில் சூரிய வெளிச்சம் பளீரென்று அடிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அந்த இரண்டு நாட்களில் தோன்றும் அதிசயத்தைப் பார்க்க வருகிறார்கள்.
மார்ச் 21, செப்டம்பர் 23 ஆகிய இந்த நாள்களின் பின்னால் விஞ்ஞானப் பின்புலம் உள்ளது. இவை சம பங்கு நாட்கள் (Equinox)  அதாவது ஒரு வருடத்தில், இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான், பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சம அளவு நேரங்களில் அமையும். அதாவது, பன்னிரண்டு மணி நேரம் சூரியன் தெரிகிற பகல்.  பன்னிரண்டு மணி நேரம் சூரியன் மறைந்திருக்கும் இரவு.
சூரியன் மாயர்களின் முக்கியக் கடவுள். தங்கள் கோவில்களில் சூரிய வெளிச்சம் விழுவது நல்ல சகுனம் என்று அவர்கள் நினைத்தார்கள். கேட்ஸால்கோயாட்டெல் நினைவுச் சின்னத்தின் படிகளில், இந்த இரண்டு சம பங்கு நாட்களில்  மட்டும் வெயில் விழும். மற்ற நாட்களில் வெயில் விழாது.
இப்படி வருமாறு எப்படி வடிவமைத்தார்கள், கட்டட நிழல் கேட்ஸால்கோயாட்டெல் வடிவாக எப்படி வருகிறது, சம பங்கு நாட்கள் பற்றி மாயர்களுக்கு எப்படித் தெரியும்?  விடை இல்லாப் பல ஆச்சரியங்கள்!
சூரியன் மட்டுமல்ல, சந்திரனின் இயக்கத்தையும் அவர்கள் கூர்ந்து கவனித்தார்கள், பதிவு செய்தார்கள். அந்தப் பதிவுகள் சில ஆராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்புகளுக்காக மாயர்கள் வான் ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். இங்கே தொலைநோக்கிகள்  போன்ற கருவிகள் இருந்ததாகச் சான்றுகள் சொல்கின்றன.
காலண்டர்கள் என்று நாம் சொல்லும் நாள்காட்டிகள் காலத்தைப் பகுத்து ஒழுங்குபடுத்தி அமைக்கும் முறை. நாட்கள், மாதங்கள், வருடங்கள் எனக் காலம் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் பிரிக்கப்படுகிறது. காலண்டர்கள் சூரிய, சந்திரச் சுழற்சிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன.
சூரிய சந்திர இயக்கங்கள் தெரிந்தவர்கள், கணிதத்தில் வல்லவர்கள், வான் ஆய்வுக்கூடங்கள் கொண்டவர்கள் என்ற பல திறமைகளையும் ஒருங்கிணைத்த மாயர்கள் தங்கள் காலண்டர்களை உருவாக்கினார்கள்.
நாம் கடைப்பிடிக்கும் கிரிகோரியன் காலண்டர் வருடத்தில் 365 நாட்களைக் கொண்டது. மாயர்களின் காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை.
ஒன்று 365 நாட்கள் கொண்டது. வருடத்துக்கு 18 மாதங்கள். மாதத்துக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டரை ஹாப் காலண்டர் (Haab) என்று அழைத்தார்கள். மாதம் 20 நாட்களாக, இந்தக் காலண்டரில் வருடத்துக்கு 360 நாட்கள் வரும். ஆனால், வானியல் முறைப்படி வருடத்துக்கு 365 நாட்கள் வேண்டும் என்று மாயர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
காலண்டர் வகுத்த 360 போக எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். அந்த நாட்களில், எந்த நல்ல காரியங்களும் செய்யமாட்டார்கள். இந்தக் காலண்டர் சாமானியர்களின் உபயோகத்துக்காக உருவாக்கப்பட்டது. கி. மு. 550 – இல் இந்தக் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வொரு வருடத்துக்கும் 13 மாதங்கள், மாதங்களுக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டருக்கு  இஸால்கின் (Isalkin) என்று பெயரிட்டார்கள். இது புனிதக் காலண்டர் என அழைக்கப்பட்டது.
நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என கிரகங்களின் பெயரில் கிழமைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறோம். மாயர்கள் இதே முறையில், தங்களுடைய மாதத்தின் இருபது நாட்களுக்கும் ஒவ்வொரு கடவுள் பெயர் சூட்டினார்கள்.
ஹாப், இஸால்கின் ஆகிய இரண்டு காலண்டர்களும் 52 வருடங்களுக்கு ஒரு முறை இணையும். இந்த இணைப்பு நடக்கும்போது, அதாவது 52 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று மாயர்கள் நம்பினார்கள்.
மாயன் காலண்டர் 5126 வருடக் கால அளவு கொண்டது. 2012ம் வருடம் டிசம்பர் 21 அன்று இது முடிந்துவிட்டது. உலகம் அன்றோடு முடியப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்று பலர் நினைத்தார்கள், பயந்தார்கள். ஆனால், அந்த பயங்கள் அர்த்தமற்றவை என்று காலம் நிரூபித்துவிட்டது. ஒரு வேளை, மாயன் காலண்டரின் அர்த்தம் வித்தியாசமானதோ, நாம் புரிந்துகொள்ளமுடியாத ஏதோ ஒரு  தாத்பரியம் அதற்குள் மறைந்திருக்கிறதோ?  எஸ்.எல்.வி. மூர்த்தி  .tamilpaper.net

கருத்துகள் இல்லை: